Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Coolie 6th day: "கூலி"க்கு என்ன அப்படி அவசரம்! சன் பிக்சர்ஸிடம் ஹைகோர்ட் நீதிபதி கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூலி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்சார் குழு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில் கூலி திரைப்படம் குறித்த வழக்கை அவசரமாக விசாரிக்க என்ன அவசியம் உள்ளது என நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது கடந்த 6 நாட்களில் ரூ 216 கோடியை வசூலித்துள்ளது.

television rajinikanth coolie

இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, ஆமீர்கான், சவுபின், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஜெயிலர் படத்தை காட்டிலும் அதிக வசூலை கூலி ஈட்டியிருப்பதாக சொல்கிறார்கள்.

கூலி படத்தை பார்த்த அனைவருமே இந்த படத்தில் அந்தளவுக்கு வன்முறை இல்லையே, இதற்கு ஏன் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஜெயிலர் படத்தில் இல்லாத வன்முறையா? அந்த படத்திற்கே U/A சான்றிதழ் கொடுக்கும் போது இந்த படத்திற்கு மட்டும் ஏன் A சான்று கொடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை படம் பார்த்தவர்கள் அனைவரும் முன்வைக்கிறார்கள்.

ஏ சான்றிதழ் படங்களை 18 வயதுக்குள்பட்டோர் பார்வையிட அனுமதி இல்லை. மேலும் தியேட்டர்களிலும் இது குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூரில் கூலி படம் மறுதணிக்கை செய்யப்பட்டு, தற்போது பெற்றோர் அனுமதியுடன் பிள்ளைகளும் கூலி படத்தை பார்க்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், "கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் ரஜினி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் தற்போது கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ரூ 400 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மிகப் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் கூலி திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஏ சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குடும்பத்துடன் திரையரங்குக்கு வருபவர்கள் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் படம் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறார்கள்.

இதனால் குழந்தைகள் பார்க்க முடியாததால் பெரியவர்களும் திரையரங்கம் வரை வந்து விட்டு குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பு என்றவுடன் டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

எனவே ஏ சான்றிதழை கூலி படத்திற்கு ரத்து செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டர். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கை அவசர வழக்காக விசாரிக்க என்ன உள்ளது? படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆன நிலையில் தற்போது வழக்கு தொடர்ந்தது ஏன் என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+