சென்னை ஹைகோர்ட் மூத்த பத்திரிகையாளர் பி.எஸ்.எல்.பிரசாத் காலமானார்!
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த செய்தியாளர் பி.எஸ்.எல்.பிரசாத் (வயது 65) உடல் நலக்குறைவால் காலமானார்
மக்கள்குரல், ஈநாடு உள்ளிட்ட தெலுங்கு நாளிதழ்களில் பணியாற்றிய இவர், தற்போது பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில், பிரசாத், அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.

1970-களில் ஒரு பத்திரிகையில் வடசென்னை பகுதி நிருபராக தன் பணியை தொடங்கியவர், பின்னர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த செய்தி சேகரிக்கும் நிருபராக நேர்த்தியான செய்தி சேகரிப்பு பணியை செய்துவந்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் செய்தியாளராக பணியாற்றிய இவர், குறிப்பாக சென்னை உயர் நீதிமன்ற செய்தி சேகரிப்பில் 23 ஆண்டுகளுக்கு மேலாக மூத்த செய்தியாளராக தனது பணியை தொடர்ந்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட இவர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிரமாக முயற்சித்தும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பிரசாத் மறைவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
உயர்நீதிமன்ற மூத்த நிருபர் திரு.பிரசாத் அவர்களது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மூலம், தொடர்ச்சியாக கேட்டறிந்து வந்தேன், உயர்நீதிமன்ற நிருபர்களின் முன்னோடி அவர்,என்னுடைய சிந்தனையும் அவருடைய சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.
என்னுடன் தனிப்பட்ட முறையில் நல்ல தொடர்பில் இருந்தவர், நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது எனக்கு தினம்தோறும் ஆறுதல் கூறுவார்,அவர் மனைவி மூலம் மூலிகை ரசம் வைக்க டிப்ஸ் கொடுக்க செய்தார். தெய்வீக சிந்தனை கொண்ட அவர் அயோத்யாவில் ராமர் கோவிலின் பூமி பூஜை நாளின் போது இறைவனடி சேர்ந்துள்ளார்..
அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு,அவருடைய குடும்பத்தார்க்கும் சார்ந்தோர்க்கும் என்னுடைய வருத்தங்கள், அவரது ஆன்மா இறைவன் மடியில் இளைப்பார பிரார்த்திக்கிறேன். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர் பிரசாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications