கரூர் கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓத ஐகோர்ட் கிளை உத்தரவு!
மதுரை: கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓதவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்துக்குள் உட்கார வைக்க வேண்டும், யாக குண்டத்துக்கு வெளியே உட்கார வைக்க கூடாது என்று கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு அளித்துள்ளது.

கரூர் தான்தோன்றி மலையில் அமைந்துள்ள கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நாளை (ஜனவரி 28) நடைபெறுவதை முன்னிட்டு கரூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றன.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற பழனி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான கோரிக்கை மிக வலுவாக எழுப்பப்பட்டது. கரூர் மாவட்டத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமுக்கூடலூர் ஸ்ரீ அகத்திஸ்வரர் கோயிலில் மணிமுக்தீஸ்வரர் சுவாமிக்கு குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என தமிழ் அறிஞர்கள், சிவனடியார்கள் கூட்டமைப்பினர் திரண்டு போராடி முதல்முறையாக தமிழில் குடமுழுக்கு விழாவை நடத்தினர்.
இந்நிலையில், கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழில் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும், குறைந்தபட்ச தமிழ் மந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜந்திரன் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று ஐகோர்ட் மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓதவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்துக்குள் உட்கார வைக்க வேண்டும், யாக குண்டத்துக்கு வெளியே உட்கார வைக்க கூடாது என்று கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு அளித்துள்ளது.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications