கரூர் கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓத ஐகோர்ட் கிளை உத்தரவு!
மதுரை: கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓதவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்துக்குள் உட்கார வைக்க வேண்டும், யாக குண்டத்துக்கு வெளியே உட்கார வைக்க கூடாது என்று கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு அளித்துள்ளது.

கரூர் தான்தோன்றி மலையில் அமைந்துள்ள கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நாளை (ஜனவரி 28) நடைபெறுவதை முன்னிட்டு கரூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றன.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற பழனி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான கோரிக்கை மிக வலுவாக எழுப்பப்பட்டது. கரூர் மாவட்டத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமுக்கூடலூர் ஸ்ரீ அகத்திஸ்வரர் கோயிலில் மணிமுக்தீஸ்வரர் சுவாமிக்கு குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என தமிழ் அறிஞர்கள், சிவனடியார்கள் கூட்டமைப்பினர் திரண்டு போராடி முதல்முறையாக தமிழில் குடமுழுக்கு விழாவை நடத்தினர்.
இந்நிலையில், கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழில் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும், குறைந்தபட்ச தமிழ் மந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜந்திரன் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று ஐகோர்ட் மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓதவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்துக்குள் உட்கார வைக்க வேண்டும், யாக குண்டத்துக்கு வெளியே உட்கார வைக்க கூடாது என்று கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு அளித்துள்ளது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications