Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓத ஐகோர்ட் கிளை உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓதவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்துக்குள் உட்கார வைக்க வேண்டும், யாக குண்டத்துக்கு வெளியே உட்கார வைக்க கூடாது என்று கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு அளித்துள்ளது.

Madurai HC Orders Tamil Hymns Alongside Sanskrit Verses at Karur Temple Consecration

கரூர் தான்தோன்றி மலையில் அமைந்துள்ள கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நாளை (ஜனவரி 28) நடைபெறுவதை முன்னிட்டு கரூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றன.

சமீபகாலமாக தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற பழனி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான கோரிக்கை மிக வலுவாக எழுப்பப்பட்டது. கரூர் மாவட்டத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமுக்கூடலூர் ஸ்ரீ அகத்திஸ்வரர் கோயிலில் மணிமுக்தீஸ்வரர் சுவாமிக்கு குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என தமிழ் அறிஞர்கள், சிவனடியார்கள் கூட்டமைப்பினர் திரண்டு போராடி முதல்முறையாக தமிழில் குடமுழுக்கு விழாவை நடத்தினர்.

இந்நிலையில், கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழில் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும், குறைந்தபட்ச தமிழ் மந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜந்திரன் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று ஐகோர்ட் மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓதவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்துக்குள் உட்கார வைக்க வேண்டும், யாக குண்டத்துக்கு வெளியே உட்கார வைக்க கூடாது என்று கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+