ஆளுநர் பதவி வேணும்னா பாஜக ஆபிஸ் போங்க! எதுக்கு சமஸ்கிருதம்,இந்தினு பேசிகிட்டு! சு.வெங்கடேசன் சுளீர்!
சென்னை : அனைத்து மொழிகளின் தாய் மொழியாக சமஸ்கிருதம் உள்ளது என இஸ்ரோ தலைவர் கூறியிருந்த நிலையில் மாநிலங்களவை எம்பி, ஆளுநர் பதவி வேண்டுமென்றால் பாஜக அலுவலகம் செல்லுங்கள் எதற்காக மொழிகளை பற்றி பேச வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தி திணிப்பு மற்றும் சமஸ்கிருத மொழிகள் குறித்து மத்திய அரசு கடந்த சில நாட்களாகவே பல்வேறு வழிகளில் திணிப்பு முயற்சி மேற்கொள்வதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமஸ்கிருத மொழி குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசிய கருத்துகள் மிகக் கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இஸ்ரோ தலைவர்
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் முதல் முறையாக சமஸ்கிருத மொழியில் படமாக்கப்பட்டுள்ள அறிவியல் படமான யானம்' திரைப்படம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள திரையரங்கில் வெளியிடப்பட்டது. இஸ்ரோ தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனின் வாழ்வியல் குறித்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் ராக்கெட் செலுத்தும் போது சந்தித்த சவால்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.

சோம்நாத்
இந்த படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், சமஸ்கிருத மொழி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது என்றும், பல்வேறு அறிவியல் சார்ந்த பதிவுகளை சமஸ்கிருதம் பதிவிட்டு உள்ளது. சமஸ்கிருத மொழியில் இருந்து திராவிட ஆரிய மொழிகள் தோன்றி உள்ளன. குறிப்பாக நம் எழுத்துக்கள் சமஸ்கிருத மொழியைப் போலவே காணப்படும் அந்த தொடர்பை நாம் விட்டுவிட கூடாது. எனவே சமஸ்கிருத மொழியை முன்னிறுத்தி செல்ல வேண்டும்" எனப் பேசினார்.

சு வெங்கடேசன்
இந்நிலையில் அனைத்து மொழிகளின் தாய் மொழியாக சமஸ்கிருதம் உள்ளது என இஸ்ரோ தலைவர் கூறியிருந்த நிலையில் மாநிலங்களவை எம்பி ஆளுநர் பதவி வேண்டுமென்றால் பாஜக அலுவலகம் செல்லுங்கள் எதற்காக மொழிகளை பற்றி பேச வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார்.

கடும் கண்டனம்
அதில்,"இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எம்பி ஆளுநராக வேண்டும் என்றால் ஆர்எஸ்எஸ் பாஜக அலுவலகத்திற்கு சென்று யார் காலையாவது பிடியுங்கள் அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆனால் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்திய மொழிகளை யார் அவமதித்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம்" என வெங்கடேசன் கூறியுள்ளார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications