ரூ.1000 உரிமைத்தொகை.. இப்போதே 15% விண்ணப்பம் ஓவர்.. சென்னை ஆணையர் ஜெ ராதாகிருஷ்ணன் பரபர தகவல்!
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கும் மணி நேற்று தொடங்கிய நிலையில், சென்னை மாநகராட்சியில் 703 ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 15 சதவீதம் டோக்கன், விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அதன்படி இத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த தினத்தில் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து, மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளுக்கான தகுதிகள், நிபந்தனைகள் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து, ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் அளித்து, இரண்டு கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் விண்ணப்பம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
சென்னையில் நேற்று ரேஷன் கடை பணியாளர்கள், தங்கள் கடைக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, விண்ணப்பம் மற்றும் முகாம் நடைபெறும் நாள், நேரம் அடங்கிய டோக்கன் ஆகியவற்றை வழங்கினர். வீட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் விண்ணப்பத்தை வழங்கி அதற்கான ஒப்புகை சீட்டையும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், சென்னை சிந்தாதிரிபேட்டையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்த முன்னோட்ட பயிற்சி முகாமை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று காலையில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ஜெ.ராதாகிருஷ்ணன், 703 ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 15 சதவீதம் டோக்கன், விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. 703 ரேஷன் கடைகளுக்கு ஏற்றபடி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு குழுவினர் அந்தந்த ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

10 இடங்களுக்கு ஒரு மண்டல குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 500 குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைக்கு ஒரு முகாம் என்ற அளவில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைக்கு ஏற்றவாறு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2500 ரேஷன் கார்டுகள் உள்ள கடை என்றால் 5 முகாம்கள் அருகருகே இருக்கும். தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்பத் தலைவிகளுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை என்றால், அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மூலமாக உடனடியாக ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் உருவாக்கிக் கொடுக்கப்படும் என்றும் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள 1,417 ரேஷன் கடைகளில் 17.81 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. முதற்கட்டமாக 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 600க்கு மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என சில நாட்களுக்கு முன்னர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications