Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்படியே ஒதுக்கப்பட்ட உதயநிதி கேம்ப்? சென்னை துணை மேயராகும் மகேஷ்.. "அவருக்கு" கல்தா தந்த ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை துணை மேயராக மகேஷ் குமார் பதவி ஏற்க உள்ளார். திமுகவிற்கு சென்னை மாநகராட்சியில் பெரும்பான்மை உள்ள நிலையில் நாளை இவர் துணை மேயராக பதவி ஏற்பது உறுதி ஆகி உள்ளது.

சென்னையின் அடுத்த மேயராக சென்னை திருவிக நகர் 74வது வார்டு உறுப்பினர் பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட உள்ளார். இவருக்கு 28 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை சென்னையில் மட்டும் 200 வார்டுகளில் 153 வார்டுகளில் தனியாக வென்று திமுக பெரும்பான்மை பெற்று மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.

பெண்கள்

பெண்கள்

முன்னதாக சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இந்த முறை பெண் மேயர் பதவி ஏற்க உள்ளதால் துணை மேயர் பதவி இந்த முறை ஆண் வேட்பாளர்களுக்கு பெரும்பாலும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் அதற்கான கடும் போட்டி நிலவி வந்தது.

 துணை மேயர்

துணை மேயர்

மேயர் பதவி இல்லாததால் துணை மேயர் பதவியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் பலருக்கு இடையே போட்டி நிலவி வந்தது. திமுக சார்பாக கேகே நகர் தனசேகரன் மற்றும் சைதை மகேஷ் குமார் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இரண்டு பேருமே துணை மேயர் பதவிக்கு தகுதியானவர்களாக பார்க்கப்பட்டனர். அதிலும் தேர்தல் வெற்றிக்கு பின் யாருக்கு இந்த பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது.

தனசேகரன்

தனசேகரன்


இதில் கேகே நகர் தனசேகரனுக்கு வாய்ப்பு இருந்தாலும் சில புகார்கள் காரணமாக அவரை திமுக தலைமை தேர்வு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக சைதை மகேஷ் குமார் கொஞ்சம் எளிமையானவர். அதேபோல் அமைதியான குணம் கொண்டவர் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது. அதோடு நீண்ட காலமாக இவர் திமுக சார்பாக கவுன்சிலராக இருக்கிறார். அதிகாரபூர்வமாக இவர் மீது எந்த விதமான கிரிமினல் கேசும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகேஷ்

மகேஷ்

நீண்ட காலமாக கவுன்சிலர் பதவி வகித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு துணை மேயர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக முக்கியமாக உதயநிதி கேம்பை சேர்ந்த சிற்றரசு, மதன்மோகன் இருவருக்கும் மேயர் பதவி ரேஸ் இருந்தது. சென்னை மேற்கு திமுகவின் மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் மறைவை அடுத்து சிற்றரசு அந்த பொறுப்பிற்கு வந்தார். அதன்பின் உதயநிதிக்கும் மிகவும் நெருக்கம் ஆனார்.

நெருக்கம்

நெருக்கம்

அதேபோல் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள வார்டில் சிற்றரசு போட்டியிட்டு வென்றார். இவர் அன்பில் மகேஷ், உதயநிதி இருவருக்கும் மிகவும் நெருக்கம். இதனால் இவருக்கே துணை மேயர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக மகேஷ் குமாருக்கு இந்த பதவி சென்றுள்ளது. அமைச்சர் பொன் முடிக்கு நெருக்கமானவர் மகேஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+