அதிருப்தியால் பாஜகவில் இணைகிறாரா? .. பொட்டில் அடித்தாற் போல் விளக்கமளித்த முன்னாள் எம்பி மைத்ரேயன்
சென்னை: அதிமுகவுடன் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். முன்பு மனவருத்தம் இருந்தது உண்மைதான், ஆனால் இப்போது அது இல்லை என்றார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்.
Recommended Video
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார், யார் தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்கும், இரண்டாவது தலைநகர் மதுரையா, திருச்சியா உள்ளிட்ட குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த இரு தினங்களாக அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினமும் கூட, இது போன்ற தகவல் வெளியானது. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது யாரோ ஒருவர் இதுபோன்ற விஷமத்தனமான கருத்துகளை பரப்புவதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.
பி.இ., படிக்க அப்ளை பண்ணியிருக்கீங்களா? சர்டிபிகேட் அப்லோடு பண்ண இன்றை கடைசி நாள்
மனவருத்தங்கள்
அதிமுகவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். முன்பு இருந்த மனவருத்தங்கள் எல்லாம் இப்போது அறவே இல்லை. இது போன்ற பொய்யான செய்திகளை நம்பாதீர்கள். தினமும் என்னால் இதற்கெல்லாம் பதிலளித்து கொண்டிருக்க முடியாது. நான் பாஜகவில் இணைய போவதாக நீண்ட நாட்களாக செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன.
தவறான செய்தி
ஆனால் நான் இன்னும் இணையவில்லை. இதிலிருந்தே மக்கள் இது தவறான செய்தி என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார் மைத்ரேயன். இவரை ஜெயலலிதா 3 முறை எம்பியாக்கி அழகுபார்த்தார். கடந்த ஆண்டுடன் இவரது பதவிக்காலம் முடிவடைந்தது. அப்போது அவர் நாடாளுமன்றத்தில் கடைசியாக உரையாற்றினார்.
இரங்கல்
அவர் கூறுகையில் என்னை 3 முறை எம்பியாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. என் மீது ஜெயலலிதா அன்பு காட்டினார். இது வேறு யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு. அவரை இந்த நேரத்தில் நான் நினைத்து பார்க்கிறேன். இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கவே இல்லை.
மீண்டும் பதவி கேட்ட மைத்ரேயன்
அது போல் நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என கண்ணீர் விட்டு அழுதார். இவர் 15 ஆண்டுகள் எம்பியாக இருந்த நிலையிலும் மீண்டும் அதே பதவிக்காக அதிமுக தலைமையிடம் முறையிட்டார். ஆனால் அப்பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதனால் மைத்ரேயன் அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் எழுந்தன. வதந்திகளும் பரவின.