தென் சென்னையிலும், மத்திய சென்னையிலும் துண்டை விரித்துப் போட்டு மெளனமாக காத்திருக்கும் மைத்ரேயன்!
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட மைத்ரேயன் ஆர்வம் காட்டி வருகிறார்.
Recommended Video

சென்னை: இன்னும் ஒரு சில நாட்கள்தான்.. அதற்கு பிறகு எம்பியாக மைத்ரேயன் நீடிப்பாரா, இல்லையா என்பது தெரியவில்லை! ஆனால் தனக்கு ஒரு சீட் எப்படியாவது வேண்டும் என்று துண்டு போட்டு விரித்துள்ளார் மைத்ரேயன்!
இவர் ஒரு பக்கா பாஜகவின் அபிமானி. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர். ஜெயலலிதாவுடன் நல்ல புரிந்துணர்வு தொடர்பு வைத்திருந்தவர்.
தனிப்பட்ட முறையில் அதிக நம்பிக்கை கொண்டவர் ஜெயலலிதா, அதனால்தான் ஏற்கனவே 2 முறை எம்பியாக இருந்த நிலையிலும், கடந்த முறையும் வாய்ப்பு தந்தார். இதனால் பாஜக-அதிமுக கூட்டணிக்கு இடையே ஒரு பாலமாகவும் செயல்பட்டார்.

4-வது முறை வாய்ப்பு?
இந்த நிலையில், விரைவில் பதவி முடிந்து, தேர்தலும் தொடங்க போகிறது. இந்த முறை மைத்ரேயனுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை. ஆனால் 4-வது முறையும் போட்டியிட மைத்ரேயன் ஆர்வம் காட்டுவதாகவே சொல்லப்படுகிறது.

தென்சென்னை
அதிலும் 2 தொகுதிகளில் ஒன்று கிடைத்தாலும் போட்டியிட ரெடியாகவே இருக்கிறார். ஒன்று தென்சென்னை, மற்றொன்று மத்திய சென்னை. இதில் தென் சென்னை மீது மைத்ரேயனுக்கு ஒரு கண். ஏனென்றால், இது இவரது சொந்த தொகுதி.

வாய்ப்பு குறைவு
ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் சிட்டிங் எம்பியாக இருக்கிறார். திரும்பவும் அந்த தொகுதியில் அவரே நிற்க போவதாக தெரிகிறது. இந்த தொகுதியை தமிழிசை சவுந்தராஜன் கேட்டு பார்த்தும், அதிமுக தலைமை தரவில்லை என்று கறாராக சொல்லிவிட்டது. அதனால் மைத்ரேயனுக்கு இங்கு வாய்ப்பு குறைவுதான் என்பதால், மத்திய சென்னைதான் சாய்ஸ்-ல் உள்ளது.

விருப்ப மனு
எதற்கும் இருக்கட்டுமே என்று தென் சென்னை, மத்திய சென்னை என இரண்டு தொகுதிகளிலுமே விருப்ப மனு தந்திருக்கிறார். இப்போது அதிமுக-பாஜக ரொம்பவும் இணக்கமாகி உள்ளதால் எப்படியும் இவருக்கு இங்கு சீட் தந்து விடுவார்கள் என்றே தெரிகிறது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications