சென்னை வியாசர்பாடியில் பயங்கர தீ விபத்து.. 15 குடிசைகள் எரிந்து நாசம்!
சென்னை: சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் 15 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சியால், தீ பரவாமல் கட்டுக்குள் வந்திருக்கிறது. அதேபோல உயிரிழப்புகளும் ஏதும் ஏற்படவில்லை.

இன்று மாலை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. முதலில் ஒரு வீட்டில் பரவிய தீ, அடுத்த சில நிமிடங்களில் மற்ற வீடுகளுக்கும் பரவ தொடங்கியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். தகவலின் பேரில் வந்த 4 தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்துள்ளனர். இதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளன.
ஆனால் விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. அதேபோல யாரும் காயமடையவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.'
தீ விபத்துக்கு காரணம் என்ன? மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்மநபர்களின் செயலா? முன் விரோதம் காரணமாக யாரேனும் இந்த செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்களா? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் பரபரப்பான பகுதியான வியாசர்பாடியில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது சலசலப்பை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications