பிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் வருகை: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் தடை!
Recommended Video
சென்னை: பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரத்தில் இன்று முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை புராதான சின்னங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை கடந்த ஆண்டு ஏப்ரல்27,28 தேதிகளில் அந்நாட்டின் வுஹான் நகரில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாட்கள் இரு தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சீனாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடம் வகிக்கும் ஹூபே மாகாணத்தின் தலைநகர்தான் வுஹான். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ஜின்பிங் இடையேயான சந்திப்பு இந்தியாவில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இச்சந்திப்புக்கு வாரணாசி உள்ளிட்ட பல இடங்கள் ஆலோசிக்கப்பட்டு இறுதியில் மாமல்லபுரத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து மாமல்லபுரத்தில் இருநாட்டு அதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர்.
அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் புதியதாக வெளிநாட்டவர்கள் விடுதிகளில் தங்க அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் வரும் 13-ந் தேதி வரை மாமல்லபுர புராதான சின்னங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
-
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications