ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு
டெல்லி: வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோல்மால் செய்ய முடியும் என்றும், நிரூபித்துக் காட்ட தனக்கு அவகாசம் தரும்படியும், நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட, நடிகர் மன்சூர் அலி கான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திண்டுக்கல் லோக்சபா தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் மன்சூர் அலி கான். தமிழக தேர்தல் களத்தில் கவனம் ஈர்த்தவர்களில் இவரும் ஒருவர். குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது, ஊசி மணி, பாசி மணி விற்பது என, மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரம் மிகுந்த வித்தியாசமாக இருந்தது.

தேர்தல் முடிவுகளில், திமுக வேட்பாளர் வேலுசாமி, 746523 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர், ஜோதிமுத்து, 207551 ஓட்டுக்களை பெற்றார்.
சுயேச்சையான, ஜோதிமுருகன், 62,875 ஓட்டுக்களை பெற்றார். மன்சூர் அலிகான், 54,957 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தை பிடித்தார்.
இருப்பினும் தோல்வியால் துவளவில்லை, மன்சூர் அலிகான். உச்சநீதிமன்ற படிக்கட்டு ஏறியுள்ளார் அவர். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள, மன்சூர் அலிகான், வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்றும், தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தால், அந்த அனுமதியின்பேரில், தானே இதை நேரடியாக நிரூபித்து காட்டுவேன் என்றும், ரிட் மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. ஒருவேளை, தேர்தல் ஆணையம் அனுமதியளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால், மன்சூர் அலிகான் என்ன செய்து மோசடி குறித்து காண்பிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எகிறியுள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications