மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை.. ஐசியூவில் திடீர் அட்மிட்.. தற்போது எப்படி இருக்கிறார் மன்சூர்?
சென்னை: பிரச்சாரத்தின்போது, திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மன்சூர் அலிகான் இந்த முறையும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்... வேலூர் தொகுதியில் களமிறங்கியிருக்கிறார்.. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் பசுபதி, பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் மகேஷ் ஆனந்த் ஆகியோரை எதிர்த்து மன்சூர் அலிகானும் வேலூரில் போட்டியிடுகிறார்.

இதையடுத்து, மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. வழக்கம்போல் தன்னுடைய பாணியிலேயே மன்சூர் அலிகானும், வேலூர் தொகுதியில் முகாமிட்டு பலாப்பழம் சின்னத்துடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
தீவிர வாக்கு சேகரிப்பு: கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாஜக அரசுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, தன்னுடைய சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார்..
நேற்று தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய கடைசி நாள் ஆகும்.. மாலை 6 மணியுடன் அனைத்து வகையான பிரச்சாரமும் முடிவடைந்தது... கடைசி நாள் என்பதால், வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மன்சூர் அலிகான் தீவிரமான ஓட்டுவேட்டையில் இறங்கினார்.. எனவே, குடியாத்தத்துக்கு வாக்கு சேகரிக்க சென்றார்.. அப்போது திடீரென அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது..
திடீர் அனுமதி: எனவே, குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு, சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார் மன்சூர் அலிகான். டாக்டர்கள் அவருக்கு தீவிரமான சிகிச்சையை தந்து வருகிறார்கள்..
உடல் நலம் பாதிக்கப்பட்டதுமே, அவசர அவசரமாக குடியாத்தத்தில் தனியார் மருத்துவமனையில் மன்சூர் அலிகானை அனுமதித்துள்ளனர்.. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. அவசர சிகிச்சையை பெற்ற நிலையிலும், மன்சூர் அலிகான் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனால், மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.. சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை: கல்லீரல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மன்சூர் அலிகான் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சையை டாக்டர்கள் வழங்கி வருவதாகவும் முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகின... தற்போது, நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக மற்றொரு தகவல் வெளியாகி வருகின்றன.
ஆனால், தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது மன்சூர் அலிகானுக்கு உடல்நிலை இயல்பாக இருக்கிறதாம்.. எனவே, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications