Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை.. ஐசியூவில் திடீர் அட்மிட்.. தற்போது எப்படி இருக்கிறார் மன்சூர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரச்சாரத்தின்போது, திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மன்சூர் அலிகான் இந்த முறையும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்... வேலூர் தொகுதியில் களமிறங்கியிருக்கிறார்.. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் பசுபதி, பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் மகேஷ் ஆனந்த் ஆகியோரை எதிர்த்து மன்சூர் அலிகானும் வேலூரில் போட்டியிடுகிறார்.

Mansoor Ali Khan sudden admitted in Chennai KK Nagar Hospital ICU and what happened actually

இதையடுத்து, மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. வழக்கம்போல் தன்னுடைய பாணியிலேயே மன்சூர் அலிகானும், வேலூர் தொகுதியில் முகாமிட்டு பலாப்பழம் சின்னத்துடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

தீவிர வாக்கு சேகரிப்பு: கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாஜக அரசுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, தன்னுடைய சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார்..

நேற்று தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய கடைசி நாள் ஆகும்.. மாலை 6 மணியுடன் அனைத்து வகையான பிரச்சாரமும் முடிவடைந்தது... கடைசி நாள் என்பதால், வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மன்சூர் அலிகான் தீவிரமான ஓட்டுவேட்டையில் இறங்கினார்.. எனவே, குடியாத்தத்துக்கு வாக்கு சேகரிக்க சென்றார்.. அப்போது திடீரென அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது..

திடீர் அனுமதி: எனவே, குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு, சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார் மன்சூர் அலிகான். டாக்டர்கள் அவருக்கு தீவிரமான சிகிச்சையை தந்து வருகிறார்கள்..

உடல் நலம் பாதிக்கப்பட்டதுமே, அவசர அவசரமாக குடியாத்தத்தில் தனியார் மருத்துவமனையில் மன்சூர் அலிகானை அனுமதித்துள்ளனர்.. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. அவசர சிகிச்சையை பெற்ற நிலையிலும், மன்சூர் அலிகான் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனால், மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.. சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை: கல்லீரல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மன்சூர் அலிகான் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சையை டாக்டர்கள் வழங்கி வருவதாகவும் முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகின... தற்போது, நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக மற்றொரு தகவல் வெளியாகி வருகின்றன.

ஆனால், தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது மன்சூர் அலிகானுக்கு உடல்நிலை இயல்பாக இருக்கிறதாம்.. எனவே, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+