Marina Rope Car: சென்னை மக்களின் கனவாச்சே.. மெரினா ரோப் கார் திட்டத்தை கைவிட முடிவா? போச்சு!
சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மெரினா முதல் பெசன்ட் நகர் வரை, "ரோப் கார் சேவை" தொடங்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் திட்டச் செலவு ரூ.73 கோடியில் இருந்து ரூ.125 கோடி வரை உயரக்கூடும் என்றும், பொதுமக்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணமும் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
சென்னையின் முக்கிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலமாக மெரினா கடற்கரை விளங்கி வருகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவையை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருந்தது.

அதிக நிதி தேவைப்படும்
இந்த திட்டத்தின் மூலம் மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப் கார் சேவையை இயக்க திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கையை மாநகராட்சியிடம் சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்காக அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் மெரினா ரோப் கார் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை மற்றும் ஆய்வு முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆய்வறிக்கையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவு ஆரம்பத்தில் கணிக்கப்பட்டதை விட பல மடங்கு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோப் கார் சேவையை பராமரிப்பதற்கும் தொடர்ந்து அதிக நிதி தேவைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்துவது சிரமமாக இருக்கும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செலவு ரூ.125 கோடி வரை உயரக்கூடும்
மெரினா ரோப் கார் திட்டம் மொத்தம் 5 கிலோமீட்டர் தூரத்தில் செயல்படுத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை ரூ.73 கோடியில் நிறைவேற்றலாம் என ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையின்படி, ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் ரோப் கார் அமைக்க சுமார் ரூ.25 கோடி செலவாகும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி 5 கிலோமீட்டர் திட்டத்தை செயல்படுத்த மொத்த செலவு ரூ.125 கோடி வரை உயரக்கூடும்.
இதுமட்டுமின்றி, மாதாந்திர பராமரிப்பு செலவும் கணிசமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், ஒரு நபருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு கட்டணம் செலுத்தி பொதுமக்கள் பயணிப்பார்களா என்ற சந்தேகத்தையும் சில அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.
தற்போது தொடங்க வாய்ப்பு இல்லை
மேலும், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி இதுவரை கிடைக்காததும் திட்டத்தின் முன்னேற்றத்தை பாதித்துள்ளது. இதனால், திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, கடற்கரை மணற்பரப்பில் அல்லாமல் சர்வீஸ் சாலை அருகே இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பது குறித்து தனியார் நிறுவனம் மூலம் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகு, அதை பரிசீலித்து திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சூழலில் மெரினா ரோப் கார் திட்டம் உடனடியாக தொடங்க வாய்ப்பு இல்லை என்றும், திட்டம் தாமதமாகும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில், திட்டத்தை முற்றிலும் கைவிடுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
-
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து














Click it and Unblock the Notifications