அன்னியூர் சிவா எம்எல்ஏ-வாக இன்று பதவியேற்பு.. விக்கிரவாண்டியின் சரித்திர வெற்றியால் திமுக மகிழ்ச்சி
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று எம்எல்ஏவாக பதவியேற்கிறார்.
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவான புகழேந்தி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, மயங்கி விழுந்து காலமானார். எனவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

எனவே, இந்த தொகுதியில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி ஏற்படும் என்று சொல்லப்பட்டது. அதேசமயம், பாமக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர் போன்றவை போட்டியிடும் என்பதால், 5 முனை போட்டி ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டது.
ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா, பாமகவின் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் அபிநயா ஆகியோர் மட்டும் களம் கண்டனர். ஆனால், அதிமுகவும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் பங்கேற்காமல் புறக்கணித்தன...
பிரச்சாரம்: இதில் திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் பிரச்சாரங்களை கையில் எடுத்தன.. குறிப்பாக கள்ளச்சாராய மரண விவகாரமானது, விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் அதிகமாகவே எதிரொலித்தது.. அத்துடன், சட்டம் - ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. எனினும், திமுகவே அபார வெற்றி பெற்றது.
கடந்த 10-ந் தேதி இந்த தேர்தலின் வாக்குப்பதிவின்போது, தபால் வாக்குகள் தொடங்கி 20-வது சுற்று வரை தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தபடியே இருந்தார்.. இறுதியில், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணியை விட சுமார் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார் அன்னியூர் சிவா.
வெற்றி சான்றிதழ்: இந்த வெற்றியையடுத்து, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் முன்னிலையில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், வெற்றிச்சான்றிதழை அன்னியூர் சிவாவுக்கு, வழங்கினார். இந்த வெற்றியின் மூலம் ஆளும்கட்சியான தி.மு.க., விக்கிரவாண்டி தொகுதியை மீண்டும் தன்வசப்படுத்தியது.
விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் திமுக மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. அதுமட்டுமல்ல, விக்கிரவாண்டி தொகுதியில் ஏற்கனவே வென்ற கட்சியின் வேட்பாளர், மறுபடியும் வெற்றி பெறுவதும் இதுதான் முதல் முறை.
அபார வெற்றி: எனவே, திமுகவும், கூட்டணி கட்சியினரும் இந்த வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அதேபோல, அகில இந்திய அளவில் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், 10 இடங்களில் இந்தியா கூட்டணியும், ஒரு சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளதை கூட்டணி கட்சிகள் பெருமிதமாக தெரிவித்து வருகின்றன.
ஆக மொத்தம், கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை என எதுவும் திமுகவுக்கு எதிரான வாக்குகளாக விக்கிரவாண்டியில் மாறவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவு பறைசாற்றியிருக்கிறது.
இன்று பதவியேற்பு: இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணி அளவில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் எல்எல்ஏவாக பதவி ஏற்கவுள்ளார். இதனால் திமுகவினர் மிகுந்த குஷியில் உள்ளனர்.
-
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?












Click it and Unblock the Notifications