வாடகை தாய் சர்ச்சை.. நயன்தாரா உடல்நல பாதிப்புக்காக சிகிச்சை எடுத்தாரே? எதற்கு? மருத்துவ குழு விசாரணை
சென்னை: நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சுகாதாரத் துறை இணை இயக்குநர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இவர்கள் விதிகளை மீறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
திருமணமாகி 5 ஆண்டுகளுக்குள் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள சட்டத்தில் இடம் இல்லை. அப்படியிருக்கும் போது நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி எப்படி திருமணமான 4 மாதங்களில் குழந்தை பெற்றுக் கொண்டனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மா சுப்பிரமணியன்
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் கேட்ட போது சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி தவறு இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி குழந்தை பெற்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு பிரபல மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

3 பேர் கொண்ட குழு
இதற்காக சுகாதாரத் துறை இணை இயக்குநர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் குழந்தை பெற்றனரா, தமிழக மருத்துவமனை என்றால் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

வாடகைத் தாய்
வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி பதிவு செய்த விவரம் அரசுக்கு அனுப்பப்பட்டதா, வாடகைத் தாய் முறை பதிவில் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் பெயர் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் தேவைப்பட்டால் நயன்தாரா- விக்னேஷ் சிவனிடமும் விசாரணை நடத்தப்படும் என அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விசாரிப்பு
நயன்தாரா அண்மையில் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் அந்த மருத்துவமனையிலிருந்து விசாரணை தொடங்கப்படுகிறது. உடல்நல பாதிப்புக்காக அட்மிட் ஆன நயன்தாரா, வாடகை தாய் முறைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா என்பது குறித்தும் விசாரிக்கப்படும். இந்த 3 பேர் கொண்ட குழுவினர் சமர்ப்பிக்கும் அறிக்கை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவ இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கப்படும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications