Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளாஸ்டிக் பைகளுக்கு 'குட் பை'தமிழகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை'க்கு கை கொடுப்போம் - மு.க ஸ்டாலின்

பிளாஸ்டிக் மாசுபாட்டினால் நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது. சுற்றுச்சூழலைக் காக்க மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக 'மீண்டும் மஞ்சப்பை' என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

ஒரு பிளாஸ்டிக் பை மக்களால் சராசரியாக பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, ஆனால், அவை மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும். அதிகப்படியான இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டினால் நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது.

கடல்வாழ் உயிரினங்கள் உள்பட நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் மற்றும் நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளையும் இந்த பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்தி வருகிறது.

35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள்

35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள்

பிளாஸ்டிக் கழிவுகளினால் ஆறு, குளம், ஏரி மற்றும் கடல் மாசடைந்து, உயிரினங்களின் வளர்ச்சியை பாதிக்கின்றன. இந்தியாவில் 2019 - 20 ஆம் ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்துள்ளன. அதே ஆண்டில் தமிழகத்தில் ஏறத்தாழ 4 லட்சம் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதேநிலை நீடித்தால் ஆறு, குளங்களில் நீருக்கு பதிலாக பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே இருக்கும் சூழல் உருவாகும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் அதிக ஆபத்துகள் ஏற்படுவதால், அதனை தமிழக அரசு முழுமையாக தடை செய்துள்ளது.

ரூ.3 லட்சம் அபராதம்

ரூ.3 லட்சம் அபராதம்

கடந்த 2019 ஆம் ஆண்டு இதற்கான அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை பிறப்பித்துள்ளது. மீறுவோருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரையும், தொடர்ந்து அதே தவறை செய்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்தது. தனி நபர், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

பிளாஸ்டிக் கவர்கள் ஒழிப்பு

பிளாஸ்டிக் கவர்கள் ஒழிப்பு

கொரோனா பரவும் சூழல் கருதி தடையை நடைமுறைப்படுத்தும் வகையில் தேக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் 'மீண்டும் மஞ்சப்பை' என்ற புதிய இயக்கத்தின் மூலம் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலும் ஒழித்து, மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை பரப்புரைக்கான நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

Recommended Video

    மீண்டும் மஞ்சள் பை… தமிழக அரசை புகழ்ந்து தள்ளிய சீமான்!
    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு

    இந்த நிகழ்ச்சியில், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்பட கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவானர் அரங்கத்தில் இன்று வைக்கப்பட உள்ளது. எனவே, பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களுக்கான கண்காட்சியை இன்று மாலை 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டு, அதனை தங்களுடைய வாழ்விலும் உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+