ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்!

Subscribe to Oneindia Tamil

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உலக நாடுகளை அதிர வைக்கும் வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ராணுவ தாக்குதல்கள் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ள ஹார்முஸ்கான் (Hormozgan) மாகாணத்தின் சிரிக் தீவில் (Sirik Island) உள்ள தொலைத்தொடர்பு டவர் (Telecoms Tower) ஒன்றின் மீது அமெரிக்க ராணுவம் சமீபத்தில் வான்வழித் தாக்குதலை நடத்தியிருந்தது.

இந்த தாக்குதல் நடவடிக்கை நடந்த அடுத்த ஒரு மணிநேரத்தில், பழிவாங்கும் விதமாக, அமெரிக்கப் படைகள் இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்திய முக்கிய விமானப்படைத் தளம் (Airbase) மீது ஏவுகணைகள் மற்றும் போர்விமானங்கள் மூலம் மிகக் கடுமையான பதிலடித் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

iran war USA Trump crude oil iran retaliatory strike us airbase irgc attack on us base sirik island us strike iran us escalation 2026 kuwait emergency alert iran hormozgan province attack iran swift retaliation centcom iran conflict middle east missile exchange iran hits back within one hour IRGC IRGC

1 மணிநேரத்தில் அதிரடி தாக்குதல்

ஈரானின் பார்ஸ் (Fars) செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, அமெரிக்க ராணுவத்தின் இந்தத் திடீர் தாக்குதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஈரானின் ஐஆர்ஜிசி (IRGC) அமைப்பின் விண்வெளி வான்படைப் பிரிவு (Aerospace Force) உடனடியாகக் களம் இறங்கியுள்ளது.

டெலிகாம் டவர் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு எந்த விமானப்படைத் தளத்தைப் பயன்படுத்தியதோ, அதே தளத்தை இலக்காகக் கொண்டு ஈரானிய போர்விமானங்கள் தங்களின் துல்லியமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளன.

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் தாங்கள் திட்டமிட்டிருந்த இலக்குகள் அனைத்தும் (Predicted targets) முழுமையாகத் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளதாக ஈரான் பாதுகாப்புப் படை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காகத் தாங்கள் தாக்கிய அமெரிக்க வான்படைத் தளம் எந்த நாட்டில் அல்லது எந்தப் பகுதியில் அமைந்துள்ளது என்ற இருப்பிட விபரங்களை ஐஆர்ஜிசி (IRGC) அமைப்பு தற்போது வரை வெளிப்படையாக விவரிக்கவில்லை.

குவைத் நாட்டில் அலறும் சைரன்கள்

மத்திய கிழக்கின் இந்த திடீர் ராணுவ மோதல்களின் எதிரொலியாக, அண்டை நாடான குவைத் தேசம் முழுவதும் தற்போது உச்சக்கட்டப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் இந்த ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து, குவைத் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air defence systems) உடனடியாக ஆன் செய்யப்பட்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில் குவைத் நாடு முழுவதும் தற்போது ஆபத்தை எச்சரிக்கும் அவசரக்கால சைரன்கள் (Sirens ringing) ஒலித்து வருகின்றன. எதிரி நாட்டு ஏவுகணைகள் தங்களின் வான் எல்லைக்குள் நுழைவதைத் தடுப்பதற்காகக் குவைத் ராணுவம் தங்களின் எல்லைப் பகுதிகளில் முழு வீச்சில் வான் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+