சென்னை அயனாவரத்தில் மீண்டும் ஷாக்.. மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பலாத்காரம்!
சென்னை: சென்னை அயனாவரத்தில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பெண்கள் மீதான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறார்கள் மீதும், மாற்றுத்திறனாளிகள் மீதும் இந்த குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. எதிர்ப்புகளை காட்டாத, அல்லது வன்முறை நடந்தாலும் வெளியில் சொல்லுவதற்கான தைரியம் போதாத பெண்கள் இலக்கு வைக்கப்பட்டு வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அப்படியான சம்பவம்தான் அயனாவரத்தில் நடந்திருக்கிறது.

அயனாவரத்தில் உள்ள இளம்பெண் ஒருவர் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவராவார். இவருக்கு சமீபத்தில் ஸ்னாப்ஷாட் எனப்படும் சோஷியல் மீடியா மூலம் சிலர் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். இவர்களுடன் தொடர்ந்து பேசி வந்த இளம்பெண்ணிடம், சில நாட்கள் கழித்து நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பி சென்ற மாணவி பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோரிடத்தில் மாணவி கூறவே அவர்கள் போலீசில் புகார் கொடுத்திருக்கின்றனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக ஸ்னாப்ஷாட் மூலம் பழகியவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.
அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி மாணவிகள் மீது வன்முறைகள் நடத்தப்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே செவிதிறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி 12 வயது மாணவி ஒருவர் இதேபோன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். தனியார் பள்ளியில் படிந்து வந்த மாணவியை பள்ளிக்கு அழைத்து செல்லவும், திரும்ப கொண்டு வந்து விடவும் பள்ளி வாகனம் வரும். இந்த வாகனத்திற்கு அழைத்து செல்ல மாணவி தங்கியிருந்த அப்பார்ட்மென்ட் லிஃப்ட் பணியாளர்கள் உதவியுள்ளனர்.
இப்படியாக மாணவிக்கும் குற்றவாளிகளுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி மாணவியை லிஃப்ட் பணியாளர்கள் முதலில் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதேபோல அவர்களுக்கு தெரிந்த காவலாளிகள், மற்ற பணியாளர்கள் என அனைவரும் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீஸ் 17 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மற்றொரு மாற்றுத்திறனாளி மாணவியும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு












Click it and Unblock the Notifications