Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனாவுக்கு தடுப்பூசி... நம்பிக்கையூட்டும் தமிழர்... ஆய்வு பணிகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துகொள்ள தமிழகத்தை சேர்ந்த ஸ்டாலின் ராஜ் என்ற ஆராய்ச்சியாளர் புதிய தடுப்பூசியை கண்டறிந்து வருகிறார்.

Recommended Video

    Corona Vaccine : நம்பிக்கையூட்டும் தமிழர்... ஆய்வு பணிகள் தீவிரம்

    வைரஸ் தொடர்பாக கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் இவர், திருவனந்தபுரத்தில் மத்திய அரசுக்கு கீழ் இயங்கும் இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    கொரோனோ அச்சுறுத்தலை முறியடிக்க வேண்டும் என்ற சபதத்தோடு தடுப்பூசியை ஆய்வு செய்து வரும் ஸ்டாலின் ராஜ், ஆராய்ச்சியில் முழுவீச்சாக ஈடுபட்டுள்ளார்.

    அலறும் உலகம்

    அலறும் உலகம்

    கொரோனோ என்ற ஒற்றை வார்த்தை ஒட்டுமொத்த நாடுகளையும் அலற வைத்திருக்கிறது. சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் தாக்குதல் இன்று இந்தியா உட்பட பல நாடுகளை குலை நடுங்க செய்துள்ளது. சாதாரண சளி, காய்ச்சலில் தொடங்கி உடலில் உள்ள பிரதான உறுப்புகளை படிப்படியாக செயலிழக்க வைத்து உயிரை பறிக்கும் ஆபத்தான வைரஸ் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும்,கொரோனோ பாதிப்பில் இருந்து மீள பல நாடுகளிலும் ஆராய்ச்சியாளர்கள் புதிய மருந்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

    தடுப்பூசி

    தடுப்பூசி

    இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை பூர்வீகமாக கொண்ட ஸ்டாலின் ராஜ் என்பவர், கொரோனா தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசியை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவருடன் 5-க்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பயோ டெக்னாலஜி துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஸ்டாலின் ராஜ், பெல்ஜியம், நெதர்லாந்து, உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் உள்ள எராஸ்மஸ் என்ற அதிநவீன ஆராய்ச்சி நிலையத்தில் வைரஸ் தொடர்பாக பல ஆய்வுகளை நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

    புரோட்டின்

    புரோட்டின்

    ஸ்பைக் என்ற புரோட்டினை குளோன் செய்து வைரஸிற்கான ஆண்டிபாடிகள் கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனிடையே திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் இன்ஸ்டியூட் ஆஃப் அட்வான்ஸ்டு வைராலஜி நிறுவனம் மூலம், கொரோனோ வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள கேரள அரசு அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. Biological Safety Levels (BSL) 3 (உயிரியல் பாதுகாப்பு நிலைகள் 3) என்ற ஆய்வகங்கள் இங்கு இல்லாதது தடுப்பூசி கண்டறியும் பணிகளில் கால தாமதம் ஏற்படச் செய்கிறது.

    பிரத்யேக தகவல்

    பிரத்யேக தகவல்

    இதனிடையே ஸ்டாலின் ராஜை நாம் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது, ''கொரோனோ தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன், அதாவது கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையாக போட வேண்டிய தடுப்பூசியை எங்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த ஆய்வு முடிவடைய குறிப்பிட்ட நேரம், காலம் எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் விரைவில் ஆய்வு வெற்றி பெற்று தடுப்பூசியை வெளிக்கொண்டு வர தீவிரமாக உழைத்து வருகிறோம். மேற்கொண்டு எந்த மாதிரியான சோதனைகள், ஆய்வுகள் என்பது பற்றியெல்லாம் கூறுவது ஏற்புடையதாக இருக்காது''.

    யார் முதலில்?

    யார் முதலில்?

    மேலும் தொடர்ந்து பேசிய ஸ்டாலின் ராஜ், '' கொரோனா தடுப்பு மருந்தை நான் மட்டும் கண்டறிய முயற்சி செய்யவில்லை. என்னை போல் பல ஆராய்ச்சியாளர்கள் பல நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நான் மட்டுமே இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னை போல் பல ஆராய்சியாளர்கள் சர்வதேச அளவில் இந்த கொரோனா தாக்குதலில் இருந்து மனிதர்களை காப்பாற்ற உழைத்து வருகின்றனர். அதனால் முதலில் யாருடைய சோதனை வெற்றிபெற்று தடுப்பு மருந்து வெளிவந்தாலும் மகிழ்ச்சியே'' எனத் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+