வரலாறு தெரியாம தப்பு தப்பா பேசாதீங்க.. மருத்துவ படிப்பு விவகாரம்.. உதயநிதிக்கு அருண்ராஜ் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் அலட்சியத்தால், நமது மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்பட்டுள்ளது. இது நம் சுகாதார கட்டமைப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அருண்ராஜ், உதயநிதி வரலாறு தெரியாமல் பேசுகிறார். கடந்த காலங்களிலும் சரண்டர் செய்யப்பட்டுள்ளது. உதயநிதி தவறான தகவல் சொல்கிறார். இந்தப் பிரச்சனைக்காக தமிழக அரசு சட்ட போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், "தன் எக்ஸ் பக்கத்தில் உதயநிதிக்கு அளித்துள்ள விளக்கத்தில், உயர் சிறப்பு (Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும் (state quota) மீதமுள்ள இடங்கள் அகில இந்தியா ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டதாகும். கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் மாநில ஒதுக்கீட்டில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரப்ப முடியாத இடங்கள் அனைத்தும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவாரா.

Udhayanidhi Arunraj tvk

வரலாறு தெரியுமா உதயநிதி

நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதம் (cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா?. 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருப்பது உண்மைக்கு புறம்பான செய்தி.

ஆனால் இந்த ஆண்டு மாநில ஒதுக்கீட்டில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் கடந்த மே 29 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

சட்டப் போராட்டம்

நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக (நேற்று) தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+