கும்பிட்டு கேட்கிறேன்.. இனிமே இப்படி செய்யாதீங்க.. எம்.எல்.ஏக்களிடம் உணர்ச்சிவசப்பட்ட துரைமுருகன்!
சென்னை : கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் சட்டப்பேரவையில் முகஸ்துதி செய்யாதீர்கள், எம்.எல்ஏக்கள் உங்கள் தலைவரை புகழ்ந்து பேச வேண்டாம், வர்ணனை செய்து நேரத்தை வீணடிப்பது சட்டமன்றத்துக்கு அழகல்ல என அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏக்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பேசும்போது தங்கள் தலைவர்களைப் பற்றி புகழ்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் பேச வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்கள் தலைவர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதால் சட்டமன்ற நேரம் வீணாவதாக சபாநாயகர் உட்பட பலரும் அவையில் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக உறுப்பினர்கள் தன்னை புகழ்ந்து பேசுவதை தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

துரைமுருகன் வேண்டுகோள் : சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்ந்து முகஸ்துதி பாடுவது பற்றிப் பேசிய அமைச்சர் துரைமுருகன், "இந்த மன்றம் உயர்வானது. நாமெல்லாம் இந்த இடத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறோம். நம் தொகுதியில் உள்ள லட்சக்கணக்கான மக்களில் நமக்குதான் அந்த பாக்கியம் கிடைத்துள்ளது. இந்த மன்றத்தில் நாம் இருந்தோம் என்பதே நம்முடைய வருங்கால சந்ததியருக்கு ஒரு பெருமை. அந்த பொறுப்பை நாம் சரிவர செய்ய வேண்டும்.
இந்த மன்றத்தில் நீண்டகாலம் பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் இருந்தார்கள். நானும் 50 ஆண்டுகளை கடந்து விட்டேன். எனக்கு ஒரேயொரு குறை உள்ளது. முதலமைச்சருக்கும் அந்த குறை உள்ளது. ஒரே ஒரு குறை,முகஸ்துதி. உறுப்பினர்கள் பேசும்போது வர்ணனையை விட்டுவிட்டு நேரடியாக சப்ஜெக்ட்டுக்கு வாருங்கள். பாதி நேரத்தை வர்ணனையிலேயே செலவழித்து விடுகிறீர்கள். அதனால் யாராவது திருப்திபடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை. அந்த நேரத்தை வீணடித்து விட்டோமே என்று வருத்தம்தான் இருக்கும்.

கும்பிட்டு கேட்கிறேன் : முதல் முறை தேர்வாகி அவைக்கு வந்தவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி சொல்வது வழக்கம். கட்சித் தலைவருக்கு நன்றி சொல்வது வழக்கம். அதிலும் போட்டி போட்டுக் கொண்டு பேசுகிறார்கள். முகஸ்துதிக்கு யார் மயங்குகிறானோ அவன் விளங்க மாட்டான். இவர்களுக்கு யார் தான் எழுதிக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. பத்திரம் எழுதுபவர்கள் போல எவனோ ஒருவன் எழுதிக் கொடுக்கிறான்.

தயவுசெய்து கையெடுத்து கும்பிடுகிறேன். எம்.எல்ஏக்கள் உங்கள் தலைவரை புகழ்ந்து பேச வேண்டாம். மன்றத்தில் அவையெல்லாம் உகந்ததல்ல. இந்த மன்றத்தின் கண்ணியத்திற்கும் ஏற்புடையதல்ல. என் தலைவன் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. மரியாதை உண்டு. உங்களுக்கும் உண்டு. அதனால்தான் ஆங்காங்கே கட்டுப்பட்டு உட்கார்ந்து இருக்கிறோம். எனவே வர்ணனையை விடுங்கள். முக்கிய பொருளை பேசுங்கள்" என வலியுறுத்தினார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications