அதெப்படி அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தலாம்? அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
சென்னை : கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தலாம் என ட்விட்டரில் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ஜனவரி 27 ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து, சசிகலாவின் உடல்நிலை சீரானதால் அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் சென்னை வராமல் சில நாட்கள் பெங்களூருவில் உள்ள வீட்டில் தங்கி இருப்பார் என கூறப்பட்டது. இதன்படி இன்று டிஸ்சார்ஜ் ஆனதும் காரில், மருத்துவமனையில் இருந்து சசிகலா புறப்பட்டு சென்றார்.
அப்போது அவர் சென்ற காரில் அதிமுக கட்சிக் கொடி பொருத்தப்பட்டிருந்தது. சசிகலா மீண்டும் கட்சியில் சேர்க்ப்பட வாய்ப்பில்லை என அதிமுக நிர்வாகிகள் கூறும் வந்தாலும், சசிகலாவை வரவேற்க தமிழகத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில், அதிமுக கொடியை பறக்க விட்டபடி சசிகலா சென்றுள்ளது அதிமுக.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அதிமுக.,வின் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அமைச்சர் ஜெயக்குமார், அஇஅதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும்; இது சட்டத்திற்குப் புறம்பானது என குறிப்பிட்டுள்ளார்.
-
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications