சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிறுத்திக்கங்க.. எல்லாத்தையும் நிறுத்திக்கங்க.. துக்ளக் குருமூர்த்திக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை விமர்சனம் செய்வதை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் ஒரே எம்பியான ஓபி ரவீந்திராநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என கூறப்பட்டது. அதேபோல் அதிமுகவின் ராஜ்யசபா எம்பியான வைத்தியலிங்கத்திற்கும் எம்பி பதவி கொடுக்கப்படலாம் என கூறப்பட்டது.

மத்திய அமைச்சரவையில் இருவரின் பெயர்களும் அடிபட்ட நிலையில் இருவருக்குமே அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கிய பாஜக அதிமுகவுக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கவில்லை.

ஏன் இன்விடேஷன் தரலை.. மேடையில் வைத்து ஜெயக்குமாருடன் மோதிய அதிமுக மா.செ.ஏன் இன்விடேஷன் தரலை.. மேடையில் வைத்து ஜெயக்குமாருடன் மோதிய அதிமுக மா.செ.

ஏதாச்சு மீந்துச்சுன்னா

ஏதாச்சு மீந்துச்சுன்னா

மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கொடுக்கப்படாதது குறித்து துக்ளக் வார இதழ் கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. அதில் கடைசியா ஏதாச்சு மீந்துச்சுன்னா குடுப்பாங்க.. அப்ப சாப்பிடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுக அவமதிப்பு

அதிமுக அவமதிப்பு

துக்ளக் இதழின் இந்த கார்ட்டூன் அதிமுகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை அவமதிக்கும் வகையில் துக்ளக்கின் கார்ட்டூன் இருந்தது.

குருமூர்த்திக்கு எச்சரிக்கை

குருமூர்த்திக்கு எச்சரிக்கை

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் துக்களக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எச்சரிக்கை விடுத்தார். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அதிமுகவை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

குருமூர்த்தி தாங்கமாட்டார்

குருமூர்த்தி தாங்கமாட்டார்

நாங்கள் விமர்சித்தால் குருமூர்த்தி தாங்கமாட்டார். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஏன் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் என தெரியவில்லை. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் கண்டனம்

அமைச்சர் கண்டனம்

ஏற்கனவே அதிமுக தலைவர்களை ஆண்மையில்லாதவர்கள் என குருமூர்த்தி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுக தலைவர்களை விமர்சித்திருப்பதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தல் துணிதான் காற்றில் ஆடும்

கந்தல் துணிதான் காற்றில் ஆடும்

பட்டுத்துணி பெட்டிக்குள்தான் இருக்கும். கந்தல் துணி தான் காற்றில் ஆடும், நிறை குளம் தலும்பாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் துக்ளக் குருமூர்த்தியை விமர்சித்தார். மேலும் குருமூர்த்தி அடக்கி வாசிப்பது அவருக்கு நல்லது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் கண்டனம்

அமைச்சர் கண்டனம்

ஏற்கனவே அதிமுக தலைவர்களை ஆண்மையில்லாதவர்கள் என குருமூர்த்தி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுக தலைவர்களை விமர்சித்திருப்பதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Jayakumar warns Thuglak editor Gurumoorthy for his cartoon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X