அமைச்சர் பொறுப்பேற்று வருஷம் 2ஆகப் போகுது! சட்டசபையில் தடுமாற்றத்துடன் பேசிய கயல்விழி செல்வராஜ்!
சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்து பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மிகுந்த தடுமாற்றத்துடன் பேசியதை கண்ட சபாநாயகர் அப்பாவு சில பாயிண்ட்களை எடுத்துக் கொடுத்தார்.
அமைச்சர் பொறுப்பேற்ற 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இன்னும் தனது பேச்சுத்திறமையை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வளர்த்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கயல்விழி செல்வராஜை பொறுத்தவரை ஆசிரியையாக இருந்து அமைச்சராகியவர் என்பது கவனிக்கத்தக்கது.

சட்டசபை கூட்டத் தொடர்
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் 4ஆம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கேள்வி நேரத்தின் போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் தொகுதி சதுரங்கபட்டினம் ஊராட்சியில் உள்ள இருளர் பகுதிக்கு சமுதாய கூடம் அமைக்க அரசு முன்வருமா என வினவினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அதிகாரிகள் எழுதிக் கொடுத்த பதிலை கூறிவிட்டு அமர்ந்தார்.

2 துணைக் கேள்விகள்
ஆனால் அதன் பிறகு விசிக எம்.எல்.ஏ.எஸ்.எஸ்.பாலாஜி எழுப்பிய 2 துணைக் கேள்விகளால் திக்குமுக்காடி போய்விட்டார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ். குறிப்பாக ரூ.925 கோடி திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக எஸ்.எஸ்.பாலாஜி பேசியதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சொல்ல வந்த விஷயத்தை புரிய வைக்க முடியாமல் தடுமாறினார். உடனே இதைக் கவனித்த சபாநாயகர் அப்பாவு, நீங்க அமைச்சரான பிறகு நிதி திருப்பி அனுப்பப்படவில்லை அது தானே என்றார்.

சபை நிகழ்வுகள்
ஆம், அதிமுக ஆட்சியில் தான் நிதி திருப்பி அனுப்பப்பட்டது என ஒரு வழியாக பைனல் பதிலுக்கு வந்தார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ். முதலமைச்சர் ஸ்டாலின் அவையில் இருந்தபோதே அவர் இவ்வாறு தடுமாற்றத்துடன் தயங்கி தயங்கி பேசியது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்களை பொறுத்தவரை துறை ரீதியான நடவடிக்கைகளை முழுமையாக அறிந்துகொண்டு தான் சட்டசபைக்கு வர வேண்டும் என்பது முதல்வர் கொடுத்துள்ள அறிவுறுத்தலாகும்.

பேச்சுத்திறமை
அமைச்சராகி 2 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையிலும் கயல்விழி செல்வராஜ் இன்னும் தனது பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனிடையே கயல்விழி செல்வராஜை பொறுத்தவரை ஆசிரியையாக இருந்து அமைச்சராகியவர் என்பது கவனிக்கத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications