கொரோனா வேக்சின் போட தயக்கம் காட்டும் அசைவ பிரியர்கள்.. தமிழக அரசு எடுத்துள்ள அதிமுக்கிய நடவடிக்கை
சென்னை: தடுப்பூசி செலுத்த அசைவ பிரியர்களும் மது பிரியர்களும் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், இதனால் 6ஆவது மெகா தடுப்பூசி முகாம் அக். 23ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை பிராட்வே பகுதியில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் சிகிச்சை முறை குறித்துக் கேட்டறிந்தனர்.
அப்போது நடமாடும் பல் மருத்துவமனை வாகனத்தையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சு தடுப்பூசி செலுத்த அசைவ பிரியர்களும் மது பிரியர்களும் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிவித்தார்.

மக்கள் தேடி மருத்துவம்
இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்ரமணியன் மேலும் கூறுகையில், "மக்கள் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சென்னையில் மக்களைத் தேடி பல் மருத்துவம் என்ற வகையில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை நடமாடும் பல் மருத்துவ வாகனம் தலைநகர் சென்னையைச் சுற்றி வர இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கும் இந்த சேவை மூலம் பொதுமக்களுக்குப் பல் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பல் மருத்துவமனை கல்லூரி கட்டுவதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றிருக்கிறது விரைவில் அங்குக் கட்டுமான பணி தொடங்க இருக்கிறது.

அசைவ பிரியர்கள்
மத்திய அரசு தற்போது தடுப்பூசியை விரைந்து கொடுக்க தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் சுமார் 53 லட்சம் தடுப்பூசிகள் கை இருப்பில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்களும் மது பிரியர்களும் தடுப்பூசி செலுத்தத் தயங்குகிறார்கள். அசைவம் சாப்பிட்டால் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற தவறான கித்துளிடம் பரப்பப்பட்டுள்ளது. அதனால் இந்த வாரம் அக். 23ஆம் தேதி சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

6ஆவது மெகா தடுப்பூசி முகாம்
6ஆவது மெகா தடுப்பூசி முகாம் இந்த வாரம், அக்.23ஆம் தேதி சனிக்கிழமை 50 ஆயிரம் முகாம்களில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான நபர்கள் தடுப்பூசி செலுத்தி விட்டார்கள். அதனால் தடுப்பூசி செலுத்தாதவர்களும் பயன்பெறும் வகையில் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. இது ஒரு முயற்சிதான். இந்த முயற்சிக்குப் பலன் கொடுத்தால் தொடர்ந்து செயல்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்
தமிழ்நாட்டில் கடந்த செப். 12ஆம் தேதி நடைபெற்ற முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 28.91 லட்சம் பேர் தடுப்பூசி போடப்பட்டது. அதைத் தொடர்ந்து செப். 19, செப் 26, அக். 3 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் முறையே 16.43 லட்சம், 25.04 லட்சம், 17.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழ்நாட்டில் முதலில் பொதுமக்களிடம் வேக்சின் தொடர்பாகச் சற்று தயக்கம் நிலவியது. இருப்பினும், 2ஆம் அலைக்குப் பிறகு, இந்த தயக்கம் பெருமளவு குறைந்துவிட்டது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வேக்சின் போட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் வேக்சின் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் தான் 6ஆவது மெகா தடுப்பூசி முகாம் அக் 23 ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications