தமிழ்நாடு அரசு அதிரடி.. நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை.. இனி பிரச்சனையே இல்லை
சென்னை: ஒரு கிலோ சாப்பாட்டு அரிசியே 70 ரூபாய்தான். ஆனால் தக்காளி கிலோ ரூ. 200க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் தக்காளி சாமானிய மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் இடமாக கோயம்பேடு சந்தை இருக்கிறது. இந்த சந்தைக்கு தினமும் 1,200 டன் காய்கறிகள் வரும். ஆனால் பருவமழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட அளவில் காய்கறிகள் வரவில்லை. குறிப்பாக 85 லாரிகளில் தினமும் 750 டன் தக்காளி சென்னைக்கு வரும்.

ஆனால் கடந்த சில நாட்களாக வெறும் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்திருக்கிறது. அதாவது தக்காளி வரத்து பாதியாக குறைந்திருக்கிறது. எனவே விலை அதிகமாக இருக்கிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "கடந்த மாதம் முழுவதும் தக்காளி கிலோ.10 ரூபாய்க்குதான் விற்பனையானது. மேலும் அதிக அளவில் மீதமிருந்ததால் நாங்கள் கொட்டிவிட்டோம். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. வழக்கமாக வரும் லோடு எதுவும் இன்று வரவில்லை.
வரத்து பற்றாக்குறைதான் இந்த விலையேற்றத்திற்கு காரணம். மட்டுமல்லாது சில வியாபாரிகள் குளிர்சாதன கிடங்கில் சேமித்து வைத்து அடுத்த நாளும் விற்பனை செய்கின்றனர்.
ஆனால் எல்லா வியாபாரிகளுக்கும் இது சாத்தியமில்லை. எனவே அரசு குளிர்சாதன கிடங்குகளை கட்டி தர வேண்டும். அப்போதுதான் வியாபாரிகள் காய்கறிகளை சேமித்து வைத்து தட்டுப்பாடு ஏற்படாமல் விற்பனை செய்ய முடியும். தற்போது 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.800-900 வரை வாங்கி வருகிறோம்" என்று கூறியிருந்தனர். இதனால் தக்காளி கிலோ ரூ.160 முதல் 180 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் கிலோ ரூ.200ஐ தாண்டியிருக்கிறது.
இதனால் சாமானிய மக்களுக்கு தக்காளி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனை தவிர்க்க உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.75 என விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும் விற்பனை தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே எல்லா தக்காளியும் விற்று தீர்ந்துவிடுவதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் தக்காளி சென்று சேர்வது சாத்தியமில்லாததாக மாறியுள்ளது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி சில இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "தக்காளி விலையை கட்டுப்படுத்த மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ஏற்கனவே 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 200 கடைகளில் விற்பனை செய்யப்படும்.
வெளிச்சந்தையில் ரூ.180க்கு தக்காளி விற்கப்படும் நிலையில், அரசு சார்பில் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விளைச்சல் குறைந்ததால் வரத்து அடிவாங்கியுள்ளது. எனவேதான் விலை உயர்ந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications