தமிழ்நாடு அரசு அதிரடி.. நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை.. இனி பிரச்சனையே இல்லை
சென்னை: ஒரு கிலோ சாப்பாட்டு அரிசியே 70 ரூபாய்தான். ஆனால் தக்காளி கிலோ ரூ. 200க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் தக்காளி சாமானிய மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் இடமாக கோயம்பேடு சந்தை இருக்கிறது. இந்த சந்தைக்கு தினமும் 1,200 டன் காய்கறிகள் வரும். ஆனால் பருவமழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட அளவில் காய்கறிகள் வரவில்லை. குறிப்பாக 85 லாரிகளில் தினமும் 750 டன் தக்காளி சென்னைக்கு வரும்.

ஆனால் கடந்த சில நாட்களாக வெறும் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்திருக்கிறது. அதாவது தக்காளி வரத்து பாதியாக குறைந்திருக்கிறது. எனவே விலை அதிகமாக இருக்கிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "கடந்த மாதம் முழுவதும் தக்காளி கிலோ.10 ரூபாய்க்குதான் விற்பனையானது. மேலும் அதிக அளவில் மீதமிருந்ததால் நாங்கள் கொட்டிவிட்டோம். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. வழக்கமாக வரும் லோடு எதுவும் இன்று வரவில்லை.
வரத்து பற்றாக்குறைதான் இந்த விலையேற்றத்திற்கு காரணம். மட்டுமல்லாது சில வியாபாரிகள் குளிர்சாதன கிடங்கில் சேமித்து வைத்து அடுத்த நாளும் விற்பனை செய்கின்றனர்.
ஆனால் எல்லா வியாபாரிகளுக்கும் இது சாத்தியமில்லை. எனவே அரசு குளிர்சாதன கிடங்குகளை கட்டி தர வேண்டும். அப்போதுதான் வியாபாரிகள் காய்கறிகளை சேமித்து வைத்து தட்டுப்பாடு ஏற்படாமல் விற்பனை செய்ய முடியும். தற்போது 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.800-900 வரை வாங்கி வருகிறோம்" என்று கூறியிருந்தனர். இதனால் தக்காளி கிலோ ரூ.160 முதல் 180 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் கிலோ ரூ.200ஐ தாண்டியிருக்கிறது.
இதனால் சாமானிய மக்களுக்கு தக்காளி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனை தவிர்க்க உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.75 என விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும் விற்பனை தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே எல்லா தக்காளியும் விற்று தீர்ந்துவிடுவதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் தக்காளி சென்று சேர்வது சாத்தியமில்லாததாக மாறியுள்ளது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி சில இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "தக்காளி விலையை கட்டுப்படுத்த மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ஏற்கனவே 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 200 கடைகளில் விற்பனை செய்யப்படும்.
வெளிச்சந்தையில் ரூ.180க்கு தக்காளி விற்கப்படும் நிலையில், அரசு சார்பில் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விளைச்சல் குறைந்ததால் வரத்து அடிவாங்கியுள்ளது. எனவேதான் விலை உயர்ந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications