Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னை கைது செய்வதற்காகவே ஆவணங்களில் அமலாக்கத்துறை திருத்தங்கள் செய்துள்ளது: செந்தில் பாலாஜி பரபர மனு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் அமலாக்கத்துறை திருத்தம் செய்துள்ளதாக பரபரப்பு புகார் மனுவை அளித்துள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

 Minister Senthil balaji petition against ED that they amended the documents

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை 15வது முறையாக, ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

ஆவணங்களில் திருத்தம் செய்துள்ளனர்: இதற்கிடையே, தனக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் அமலாக்கத்துறை திருத்தம் செய்துள்ளதாகவும், தங்களுக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செந்தில்பாலாஜியின் இந்த மனுவுக்கு ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். பின்னர், இந்த வழக்கில் செந்தில்பாலாஜி மீது ஜனவரி 22 அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி அல்லி, அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு: கைதாகி சுமார் ஏழு மாதங்கள் ஆகியும் செந்தில் பாலாஜிக்கு இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை. ஏற்கனவே ஜாமீன் கேட்டு இரு முறை மனு தாக்கல் செய்யப்பட்ட போதும் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, வருமான வரித்துறையின் சொத்து மதிப்பீட்டு குழுவினர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் கொங்கு மெஸ் மணி அவரது அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்நகர் பகுதியில் புதிதாக கட்டி வரும் பிரம்மாண்ட பங்களாவில் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+