கேவலமா இல்லையா இது! AE யாருய்யா.. வரச்சொல்லு! அதிகாரிகளை வெளுத்து வாங்கிய அமைச்சர் தாமோ அன்பரசன்!
சென்னை: குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் வெளியேறியதை பார்த்த அமைச்சர் தாமோ அன்பரசன் அங்கிருந்த உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து காய்ச்சி எடுத்துவிட்டார்.
கேவலமாக இல்லையா இது, நீங்களே பாருங்க, உங்க வீட்டு பக்கத்தில் இப்படியிருந்தால் சும்மா இருப்பீர்களா என அதிகாரிகளை வெளுத்து வாங்கினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் ஆடிப்போய் நின்று கொண்டிருந்தனர். கழிவுநீர் பிரச்சனையை ஓரிரு நாட்களில் சரி செய்துவிடுவதாக அமைச்சரிடம் உறுதி அளித்தனர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்வதற்காக சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள கண்ணகி நகர், எழில் நகருக்கு சென்றிருந்தார் அமைச்சர் தாமோ அன்பரசன். அப்போது கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு கட்டிடங்களை ஒட்டி கொதகொதவென்று தேங்கி நின்றது.
இதனை பார்த்ததும் அமைச்சர் தாமோ அன்பரசன் கடுமையாக டென்ஷன் ஆனார். இது போதாதென்று லோக்கல் கட்சிக்காரர்களும் அதிகாரிகளின் மெத்தனம் குறித்து அமைச்சர் காதில் புகார் சொன்னார்கள். இதையடுத்து கோபத்தின் உச்சிக்கே சென்ற தாமோ அன்பரசன் ஆன் தி ஸ்பாட்டிலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து எல்லோர் முன்னிலையிலும் டோஸ் விட்டார்.

அமைச்சரின் இந்த ஆய்வின் போது தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உடனிருந்தார். அலுவலகத்தில் அமர்ந்து நாட்களை கழிக்காமல் அடிக்கடி ஆய்வுக்கு சென்று சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என பாடமும் நடத்தினார்.












Click it and Unblock the Notifications