கொட்டும் மழையில் நனைந்து கொண்டே.. பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. நெகிழ்ந்த மக்கள்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் ஆயிரம் பேருக்கு அரிசி, வெல்லம், புத்தாடைகள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உதயநிதி ஸ்டாலின் நனைந்தபடியே பொங்கல் பரிசுத்தொகுப்பை கொடுத்தது அங்குள்ள மக்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். கடந்தாண்டு இந்த பொங்கல் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது.
அதன்படி இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்ய அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதன்படி வரும் 12ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ.1000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக இன்று காலையில் இருந்து ரேஷன் கடைகளில் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.
இதற்கிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பிலும் மக்களுக்கு பொங்கள் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் ஆயிரம் பேருக்கு அரிசி, வெல்லம், புத்தாடைகள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினார்.
பரிசுத்தொகை வழங்கி கொண்டு இருந்த போதே மழை பெய்ய தொடங்கியது. எனினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நனைந்தபடியே பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினார். மழையில் நனைந்தபடியே உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகுப்பை தனது கைகளாலே அனைவருக்கும் கொடுத்தார். இது அங்குள்ள மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications