Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் எய்ம்ஸ் செங்கலுடன் பிரச்சாரமா? வந்துவிழுந்த கேள்வி.. உதயநிதி ஸ்டாலின் சூசக பதில்!

செங்கலுடன் மீண்டும் பிரச்சாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதுரை எய்ம்ஸ் செங்கலுடன் பிரச்சாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதேபோல் ஈரோடு இடைத்தேர்தலில் அமைச்சர்கள் பணியாற்றுவதால், எந்த பணிகளும் தேக்கமடையவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஒவ்வொரு நாளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக முக்கிய தலைவர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாதது குறித்து திமுகவினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் செங்கலுடன் பிரச்சாரம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில், தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படுகிற 'காலத்தால் கரையாத காட்சிகள்' என்ற புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். இந்த கண்காட்சியை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

நினைவுகள்

நினைவுகள்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், புகைப்பட கண்காட்சியில் எனது புகைப்படங்களும் உள்ளது. அதேபோல் முக்கியத் தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அதனை பார்க்கும் போது பழைய நினைவுகள் வந்தன என்று தெரிவித்தார்.

 பிரச்சாரம் நிச்சயம்

பிரச்சாரம் நிச்சயம்

தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தல் பற்றிய கேள்விக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். நான் கண்டிப்பாக பிரச்சாரத்திற்கு செல்வேன். அடுத்த வாரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்வதால் பணிகள் பாதிக்கப்படவில்லை. அமைச்சர்கள் அனைவரும் அவர்களின் பணிகளையும் சேர்த்து செய்து வருகின்றனர். அது வரும் நாட்களில் தெரியும் என்று தெரிவித்தார்.

செங்கலுடன் பிரச்சாரம்?

செங்கலுடன் பிரச்சாரம்?

பின்னர், மதுரை எய்ம்ஸ் செங்கலுடன் மீண்டும் பிரச்சாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார். தொடர்ந்து துறை ரீதியிலான கேள்விகளுக்கு, ஏற்கனவே விளையாட்டுத் துறையில் ஏராளமான பணிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அதனை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. வரும் நாட்களில் அதனை சரி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+