“திமுகவின் கொத்தடிமை ரகுபதி”.. எடப்பாடி அப்படி சொன்ன அடுத்த சில நிமிடங்களில் நடந்த மேஜர் மாற்றம்!
சென்னை: தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரகுபதி சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்த நிலையில் அவரிடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நீர்வளத்துறை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் வசமே இருக்கிறது.

அமைச்சரவை இலாகா மாற்றம்
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, செந்தில்பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கரிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜி வசமிருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியிடம் இருந்த வனத்துறையும், மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சராக இருக்கும் ரகுபதிக்கு, அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமவளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை இலாகா மாற்றம் குறித்து முதலமைச்சர் பரிந்துரைத்ததை ஏற்று ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளது.
ரகுபதி பேச்சு
பெண்கள் வேலைக்குச் செல்வதில் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கல்லூரி செல்லும் பெண்களும் தமிழ்நாட்டில் தான் அதிகம். தூங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இதெல்லாம் புரியாது. யாராவது அவரை தட்டி எழுப்பிச் சொல்லுங்கள் எனக் கூறி இருந்தார் அமைச்சர் ரகுபதி.
எடப்பாடி பேச்சு
இந்நிலையில் சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "நான் தூங்கிக் கொண்டு இருப்பதாக அமைச்சர் ரகுபதி கூறுகிறார். நான் விழித்துக்கொண்டு சிறப்பாக செயல்படுவதால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ரகுபதி இப்படிச் சொல்கிறார். அரசும், காவல்துறையும், முதலமைச்சரும் தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறார்.
ரகுபதி மீது சரமாரி தாக்கு
அமைச்சர் ரகுபதியை பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொத்தடிமையாக செயல்பட்டு வருகிறார். ரகுபதியை அமைச்சராகி அழகு பார்த்ததே அதிமுக தான். ரகுபதியை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கி, ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் கொடுத்து இந்த நாட்டிற்கு அடையாளம் காட்டியதே அதிமுக தான். அவர் தற்போது நன்றியை எல்லாம் மறந்து திமுகவிற்கு அடிமைக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
மக்களுக்காக என்றைக்கும் உழைக்கும் கட்சி அதிமுக. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் சேவை செய்வதில் முன்னோடியாக இருப்பது அதிமுக தான். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடக்கின்றன" என விமர்சித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ரகுபதி பெயரைச் சொல்லிக் காட்டமாக விமர்சித்துப் பேசிய அடுத்த சில நிமிடங்களில் ஆளுநர் மாளிகையில் இருந்து அமைச்சர்கள் இலாகா மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியானது. அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, துரைமுருகனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
-
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications