தோல்வி தொட்டதே இல்லை.. கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின்
கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Recommended Video
இன்றைய தினம் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விதி எண் 10-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்..

அப்போது பேசும்போது, "இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கலைஞர்" என்று புகழாரம் தெரிவித்துள்ளார்... என் பாதை சுயமரியாதை, தமிழ்நெறி காக்கும் பாதை என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்..
மேலும் ரூ.39 கோடி செலவில் 2.21 ஏக்கரில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.... கருணாநிதி நினைவிடத்தில் அவரின் வாழ்க்கை சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து முதல்வர் பேசும்போது, "இன்று நாம் பாக்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது.. 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர்... 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர்.. தோல்வி அவரை தொட்டதே இல்லை.. வெற்றி அவரை விட்டதே இல்லை.. என் பாதை சுயமரியாதை, தமிழ் நெறி காக்கும் பாதை" என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications