கொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்: ஸ்டாலின்
சென்னை: கொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

மீண்டும் முழு ஊரடங்கு என்பது வதந்தி என்று இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன @CMOTamilNadu 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு என்று இன்று அறிவிக்கிறார். ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை!
இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும்! ஊரடங்கு மட்டுமே தீர்வு என்ற மாயையிலிருந்து அதிமுக அரசு முதலில் வெளிவந்து விரிவான பரிசோதனைகள், தொற்றுக்கான தொடர்புகள், உரிய சிகிச்சைகளே #Covid19-ஐ தடுக்கும் வழி என்பதை உணர வேண்டும்.

கொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காலம் கடந்த முடிவு- வரவேற்பு
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருப்பதாவது:

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவித்திருப்பது காலம்கடந்த முடிவு.எனினும் வரவேற்கிறோம். .ஆனால் முழு அடைப்புமட்டுமே தீர்வல்ல. அம்மாவட்டங்களில் அனைவருக்கும் பரிசோதனைகள் செய்து தனிமைப்படுத்தல் சிகிச்சையளித்தல் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications