ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவா? மு.க.ஸ்டாலின், வைகோ கண்டனம்
சென்னை: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் தீர்மானத்தை இந்தியா எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்கிற தகவலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மீதான போர்க்குற்றங்கள் விவகாரத்தில் அந்த நாடு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனப்படுகொலைக்குள்ளான தமிழருக்கு நீதி கிடைக்கும் செயல்பாடுகளையும் இலங்கை மேற்கொள்ளவில்லை.

இதற்கு ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
இந்த தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. முதலில் இத்தீர்மானத்துக்கு ஆதரவு- எதிர்ப்பு தெரிவிக்காமல் இந்தியா நடுநிலை வகிக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
தற்போது இந்த தீர்மான விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையையே இந்தியா எடுத்திருக்கிறது என இலங்கை வெளியுறவுத் துறை செயலாளர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தியாவின் இத்தகைய நிலைப்பாடு வன்மையான கண்டனத்துக்குரியது என மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இப்பிரச்சினையில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது கடும் அதிர்ச்சி தருகிறது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி











Click it and Unblock the Notifications