ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவா? மு.க.ஸ்டாலின், வைகோ கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் தீர்மானத்தை இந்தியா எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்கிற தகவலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மீதான போர்க்குற்றங்கள் விவகாரத்தில் அந்த நாடு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனப்படுகொலைக்குள்ளான தமிழருக்கு நீதி கிடைக்கும் செயல்பாடுகளையும் இலங்கை மேற்கொள்ளவில்லை.

MK Stalin, Vaiko condemn Indias Support to Srilanka in UNHRC

இதற்கு ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

இந்த தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. முதலில் இத்தீர்மானத்துக்கு ஆதரவு- எதிர்ப்பு தெரிவிக்காமல் இந்தியா நடுநிலை வகிக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

தற்போது இந்த தீர்மான விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையையே இந்தியா எடுத்திருக்கிறது என இலங்கை வெளியுறவுத் துறை செயலாளர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தியாவின் இத்தகைய நிலைப்பாடு வன்மையான கண்டனத்துக்குரியது என மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இப்பிரச்சினையில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது கடும் அதிர்ச்சி தருகிறது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+