சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று உறுப்பினராக தம்மை இணைத்துக் கொண்டார்.
அண்ணாவின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு 2010-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி முதல்வராக இருந்த கருணாநிதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக இது போற்றப்படுகிறது.

போட்டி தேர்வாளர்களுக்கு உதவி
பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட நூலகமாக இது உருவாக்கப்பட்டது. பல லட்சம் புத்தகங்களைக் கொண்டிருக்கும் இந்நூலகம் போட்டி தேர்வாளர்களுக்கான வாசஸ்தலமாக திகழ்கிறது.

திருமண மண்டபமாக்கும் முயற்சி
இதனிடயே அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தவும் கூட ஏற்பாடுகள் செய்தன. ஆனால் அத்தனையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கடுமையான நடவடிக்கைகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

ஸ்டாலின் பார்வையிட்டார்
தற்போது தமிழக அரசின் பராமரிப்புடன் அண்ணா நூற்றாண்டு நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தை திமுக தலைவர் ஸ்டாலின், லோக்சபா எம்.பி. ஆ. ராசா உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டனர்.

வருகைப் பதிவேட்டில் கையெழுத்து
அங்கு வைக்கப்பட்ட நூல்கள் குறித்து திமுகவினர் ஆய்வு செய்தனர். பின்னர் நூலக பிரமுகர்கள் வருகைப் பதிவேட்டில் ஸ்டாலின், ஆ.ராசா உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.
|
அரசு நடவடிக்கையால் உறுப்பினர்
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்ட ஸ்டாலின் இன்று அந்நூலகத்தில் உறுப்பினராக இணைந்தார் என தெரிவித்துள்ளது. மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பதிவில், பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்' உறுப்பினர் சேர்க்கை தொடங்குவதாக அரசு நேற்று அறிவித்தது. இதனையடுத்து, இன்று காலை, #AnnaCentenaryLibrary சென்று என்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
|
பராமரிக்க வலியுறுத்தல்
"மாணவர்களின் அறிவுத் தேடலுக்குப் பெரிதும் பயனளிக்கும் 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தை', அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்காமல், இனியாவது தொடர்ந்து நல்ல முறையில் பராமரித்திடவும், படிக்க வரும் மாணவ-மாணவியர்கள் குறைகளை களைந்திடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்!" இவ்வாறு ஸ்டாலின் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
-
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்.. ஒன்றில் மட்டுமே தனி சின்னம்! தொகுதி பங்கீடு கையெழுத்து -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை











Click it and Unblock the Notifications