முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சென்று திடீரென சந்தித்த எம்எல்ஏ கருணாஸ்!
சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கருணாஸ் எம்எல்ஏ, முதல்வர் பழனிச்சாமியை நேரில் சென்று இன்று சந்தித்து பேசினார்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் ஆதரவை திரட்டும் பணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை சொற்ப ஓட்டுக்கள் கூட வெற்றியை பறித்துவிடும் என்பதால் அனைத்து கூட்டணி கட்சிகளையும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட வைத்து வெற்றி பெற விரும்புகிறார்.
இந்நிலையில் ஏற்கனவே பாமக, தேமுதிக , பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ள அதிமுக, இப்போது கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் ஆதரவையும் பெற்றுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிச்சாமியை நேரில் சென்று சந்தித்து கருணாஸ் எம்எல்ஏ அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். இது தொடர்பாக கருணாஸ் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு அளிக்கும் என்றும அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை பிரச்சாரம் செய்யும் என்றும் கூறியுள்ளார்.
இப்படித்தான் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கருணாஸ் சென்றார். அந்த சந்திப்பு கருணாஸ்க்கு ராஜயோகமாக மாறியது. ஜெயலலிதா திடீரென நீங்கள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் எம்எல்ஏவாக போட்டியிடுங்கள் என்று அவருக்கு ஒரு சீட் கொடுத்தார். இதை பின்னாளில் கருணாஸே கூறியிருந்தார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications