முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சென்று திடீரென சந்தித்த எம்எல்ஏ கருணாஸ்!
சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கருணாஸ் எம்எல்ஏ, முதல்வர் பழனிச்சாமியை நேரில் சென்று இன்று சந்தித்து பேசினார்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் ஆதரவை திரட்டும் பணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை சொற்ப ஓட்டுக்கள் கூட வெற்றியை பறித்துவிடும் என்பதால் அனைத்து கூட்டணி கட்சிகளையும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட வைத்து வெற்றி பெற விரும்புகிறார்.
இந்நிலையில் ஏற்கனவே பாமக, தேமுதிக , பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ள அதிமுக, இப்போது கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் ஆதரவையும் பெற்றுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிச்சாமியை நேரில் சென்று சந்தித்து கருணாஸ் எம்எல்ஏ அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். இது தொடர்பாக கருணாஸ் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு அளிக்கும் என்றும அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை பிரச்சாரம் செய்யும் என்றும் கூறியுள்ளார்.
இப்படித்தான் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கருணாஸ் சென்றார். அந்த சந்திப்பு கருணாஸ்க்கு ராஜயோகமாக மாறியது. ஜெயலலிதா திடீரென நீங்கள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் எம்எல்ஏவாக போட்டியிடுங்கள் என்று அவருக்கு ஒரு சீட் கொடுத்தார். இதை பின்னாளில் கருணாஸே கூறியிருந்தார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications