எங்களை பதவியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரமில்லை.. ரத்தினசபாபதி அதிரடி
சென்னை: எங்களை எம்எல்ஏவாக வெற்றி பெற செய்தவர் ஜெயலலிதாதான், அதனால் எங்களை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க அதிகாரமில்லை என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 3 எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்குமாறு இவர்கள் 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. பின்னர் இதை பற்றி செய்தியாளர்களிடம் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் சொன்னதாவது:

கொள்கைகள்
"சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் கிடைத்தது. மூவரும் ஆலோசித்து சபாநாயகருக்கு உரிய பதில் அனுப்புவோம். ஜெயலலிதா தான் எங்களை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றி பெற வைத்தார். அந்த வெற்றியில் சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமையில்லை. ஜெயலலிதாவின் கொள்கைகளை எங்களை விட பெரிதாக மதிப்பவர்கள் யாரும் கிடையாது.

ஓ பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடித்தவர்கள் நாங்கள். ஆனால், அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக நடந்து கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. ஆட்சியை நீடிக்க வாக்களித்த எங்களை பதவியில் இருந்து நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வழக்கு
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று வழக்கு தொடர்ந்துள்ளோம். அதிமுகவின் சசிகலா அணியில் தான் நாங்க உள்ளோம். அதிமுகவின் ஒரு பிரிவுக்கே ஆதரவாக செயல்பட்டோம்.

சசிகலா
அமமுகவை கட்சியாக அறிவித்த நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்கவில்லை. ஓபிஎஸ் - இபிஎஸ் கையெழுத்திட்டுத் தான் சசிகலா அதிமுகவின் பொது செயலாளரானார். அவர் தொடர வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை" என்றார்.












Click it and Unblock the Notifications