தலைவா வாங்க.. போட்டியிடலாம்.. கமலுக்கு ரசிகர்கள் உற்சாக அழைப்பு
சென்னை: திருவாரூர் இடைத் தேர்தல் தேதி மற்ற கட்சிகளைப் போலவே மக்கள் நீதி மய்யம் தொண்டர்களிடையேயும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் சட்டசபைத் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிட கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாடு குறித்து அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர்.
இதற்கிடையே, கமல் ஹாசனின் தொண்டர்கள் தேர்தல் தேதி அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ளனர். கமல்ஹாசனின் டிவிட்டர் பக்கத்தில் அது எதிரொலிக்கிறது. முழு உற்சாகத்துடன் ஏகப்பட்ட பேர் கமல்ஹாசனுக்கு தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுத்து வருகின்றனர். அதிலிருந்து சில.
|
போட்டியிடுவோம்
மக்கள் நீதி மையத்திற்கு இனிய ஆங்கில 2019 ஆம் ஆண்டு நல்வாழ்த்துக்கள். கண்டிப்பாக திருவாரூர் தேர்தலில் போட்டியிடுங்கள். வெற்றி தோல்வி இரண்டாம் பட்சம். ஒரு புதிய கட்சி இடைத்தேர்தலில் பங்கேற்றது என்று மக்களிடம் பேச்சு வர ஆரம்பிக்கும்.@ikamalhaasan
|
வித்தாக அமையும்
ஆம் இடைத்தேர்தலே புரட்சித்தலைவருக்கு வெற்றிக்கு வித்தாக அமைந்தது
|
எழுச்சி
தலைவா ...!...கண்டிப்பாக " மக்கள் நீதி மய்யம் " -த்தின் எழுச்சியாகவும் , தமிழகத்தின் வளர்ச்சியாகவும் , மக்களுக்கு மகிழ்ச்சியாகவும் இந்த புத்தாண்டு அமையும் ..!
|
இந்தப் புத்தாண்டில்
தலைவரே உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.நேர்மையாளரின் வெற்றிக்கு விதையூன்றலே அடித்தளம்.மநீம விதையூன்றி இந்த புத்தாண்டில் செடி விடட்டும்.உங்களின் கனவுகள் விருட்சமாகி கனிகள் வருங்காலங்களுக்கு பசியாற்றத்தான் போகிறது.அதுவரை கெட்டவர்களே மேதைகளாக தெரிந்து கரைந்து போகட்டும். வாழ்க மநீம
|
கோப்புகளில் கையெழுத்திட
மக்கள் நீதி மய்யம்
கடந்த ஆண்டு
கால் பதித்தது ..
இந்த ஆண்டு
கரம் பதிக்கும்...?
அரசு கோப்புகளில்
கையெழுத்திட....!
வருடங்கள் மட்டுமே
மாறி வந்த
இந்த அரசியல் களத்தில்
மக்களின்
வாழ்க்கைத்தரமும் உயர
வடம் பிடிக்கட்டும்....!
|
நாங்க ரெடி
தலைவரே! திருவாரூர்க்கு தேதி அறிவிச்சுட்டாங்க.. தயாரா இருக்கோம் பணிகளுக்கு.. அறிவிப்பு கொடுங்க.












Click it and Unblock the Notifications