தமிழகத்தில் அடிப்படைவாதம் நுழைய முடியாத இரும்புக் கோட்டையாக மாற்றியவர் பெரியார்.. கமல்ஹாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அடிப்படைவாதம் நுழைய முடியாத இரும்புக் கோட்டையாக மாற்றியவர் தந்தை பெரியார் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலை, உருவபடங்களுக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் சமூக வலைதளப் பக்கங்களில் தந்தை பெரியாருக்கு புகழாரம் சூட்டி பதிவிட்டனர்.

மநீம தலைவர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பகுத்தறிவுச் சிந்தனையைப் புகுத்தி அடிப்படைவாதம் நுழைய முடியாத இரும்புக் கோட்டையாகத் தமிழகத்தை மாற்றிய பெரியாரின் நினைவுகளை அசை போடுகிறேன். பெரியார் அன்றும் இன்றும் என்றும் தேவையாக இருக்கிறார்.
இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications