யாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை
சென்னை: வங்கக் கடலில் வரும் மே 24 ஆம் தேதி புயல் உருவாகவுள்ள நிலையில் சென்னையில் கருமேகங்கள் சூழ மழை பெய்து வருகிறது.
Recommended Video
வங்கக் கடலில் வரும் 24-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாகவுள்ளதாகவும் அது புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ் டே புயல் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குஜராத் அருகே போர்பந்தர் இடையே கரையை கடந்தது.

குறைந்த காற்றழுத்தம்
தற்போது வங்கக் கடலில் வரும் மே 24 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாகவுள்ளதாகவும் அது புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை
இந்த புயல் ஒடிஸா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய காற்றழுத்தம் உருவாவதற்கு முன்பே சென்னையில் மழை பெய்யும் என சொல்லப்பட்டது. அதன்படி சென்னையில் இன்று மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

கனமழை
கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு இரவு போல் காட்சியளித்தது. தற்போது முகப்பேர் மேற்கு, அண்ணாநகர், அமைந்தகரை, மாங்காடு, ஆதம்பாக்கம், மந்தவெளி, கொரட்டூர், வடபழனி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

பலத்த காற்று
வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், விருகம்பாக்கத்திலும் மழை பெய்கிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதே நேரத்தில் பெங்களூரில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications