அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையின் பல பகுதிகளில் திடீரென மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை மட்டுமல்லாது 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும்" என எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழை குளிர்ச்சியான காலநிலையை உருவாக்கினாலும், சில இடங்களில் பலத்த சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் 600 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சாய்ந்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில், மா, பலா, வாழை என, மூன்று வகை பழங்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில், வாழை விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி வாழைகளை சாகுபடி செய்துள்ளனர்.
Recommended Video
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூரைக்காற்றுடன் பெய்த திடீர் கனமழையால் 600 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முற்றிலுமாக சாய்ந்தன. இதேபோல கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். கஜா புயல் பாதிப்பிலிருந்து முற்றிலும் மீளாத நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications