ஆஹா.. வந்துருச்சுய்யா.. சென்னையை முத்தமிட்ட முதல் மழை.. மண்மணத்தில் மயங்கிய மக்கள்!
Recommended Video
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளான பழைய மாமல்லபுரம் சாலை, வண்டலூர், படூர்,சிறுசேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
கத்திரி வெயில் முடிந்த பிறகும், வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. தென் மேற்கு பருவமழை எதிரொலியாக, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட கேரளா எல்லையோரப் பகுதிகளில் அவ்வப்போது, காற்றுடன் சாரல் மழை பெய்கிறது.

சென்னை தற்போது, கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. 4 ஏரிகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துட்டது. தலைநகர் சென்னையை போல், மற்ற மாவட்ட மக்களும் தண்ணீருக்காக அலைய கூடிய சூழ்நிலை நிலவுவதால், மழையை நம்பியே மக்கள் இருக்கின்றனர்.
இதற்கிடையில், சென்னையில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் ஆறுதலான வார்த்தையை வெகு நாட்களுக்கு பிறகு கூறியது. அதன்படி, தமிழகத்தில் ஜூன் 17- ம் தேதிக்கு பிறகு படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும்.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூரில் கடந்த சில தினங்களாக அனல் காற்று வீசியது. சென்னையை பொறுத்தவரை, வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டது. இந்தநிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளான பழைய மாமல்லபுரம் சாலை, வண்டலூர், படூர்,சிறுசேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
Rains in Padur near Kelambakkam now. Siruseri too is getting rains. Southern parts of OMR and ECR in Chennai city is getting rains now. Clouds are moving from sw to ne, other parts of city might get showers too. pic.twitter.com/af5ZnydcUW
— TamilNadu Weatherman (@praddy06) June 20, 2019
இதனால், வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது. மண் வாசம் வீசி வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையில், அடுத்த 5 நாட்களுக்கு சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு குறைந்து காணப்படும் என்றும் அவர் கூறினார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications