ஜில்லென பெய்யப்போகும் பருவமழை.. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களே என்ஜாய்
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில பகுதிகளிலும், கர்நாடகாவில் சில பகுதிகளிளும் தென்மேற்கு பருவக்காற்று துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் ஒரு சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் ஜூன் ஒன்றாம் தேதி வரை கேரளாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், வானிலை மாற்றம் காரணமாக நேற்று தென்மேற்கு பருவமழைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில பகுதிகளிலும், கர்நாடகாவில் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவக்காற்று துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே முன்கூட்டியே பருவமழை தொடங்கினாலும் ஜூன் 10ஆம் தேதிக்குப் பிறகே தமிழகத்தில் பருவமழை தீவிரமடையத்தொடங்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பை ஒட்டியே இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications