Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமியாருடன்.. அடங்காத ஆட்டோ டிரைவர்.. அதிகாலையில் அரிவாளை கையில் எடுத்த மருமகன்

மாமியாருடன் தொடர்பில் இருந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமியாருடன் நெருங்கி பழகிய ஆட்டோ டிரைவரை மருமகன் வெட்டிவிட்டார்.. இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

மகளுக்கு துரோகம் செய்துவிட்டு இன்னொரு பெண்ணை தேடி செல்லும் மருமகன்கள் ஏராளம் உண்டு.. பெற்ற மகளின் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாதே என்பதற்காக, மருமகனை கொலை செய்ய துணிந்த மாமியார்கள், கைதான சம்பவங்களும் நடந்துள்ளன.

ஆனால், இங்கு ஒரு மாமியாருக்கு கள்ளக்காதல் வந்துள்ளது.. அது கொலைவரை சென்றுவிட்டது.. இப்படித்தான் கடந்த மாதமும் ஒரு சம்பவம் சென்னையில் நடந்தது..

 கள்ள உறவு

கள்ள உறவு

34 வயது இளைஞருடன் மாமியாருக்கு கள்ள உறவு இருப்பது தெரிந்ததும் கொந்தளித்து போயுள்ளார் மருமகன்.. இதனால், கள்ளக்காதல் ஜோடிக்கு வார்னிங் தந்துள்ளார் மருமகன்.. குடும்ப கவுரவம் போய்விடக்கூடாது என்று மாமியாரிடம் எடுத்து சொல்லி உள்ளார்.. எனினும் இருவருமே அவர் பேச்சை கேட்கவில்லை.. அதனால், கள்ளக்காதலனை வெட்டி கொன்றுவிட்டார் மருமகன்.

அரிவாள்

அரிவாள்

இப்போதும் அதேபோல ஒருமகன் அரிவாளை கையில் எடுத்துள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.. புளியந்தோப்பு கே.எம்.கார்டன் 13வது தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன்.. 40 வயதாகிறது.. சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை புளியந்தோப்பு கே.எம்.காலனி 13வது தெருவில் ஆட்டோ ஓட்டி கொண்டு இவர் வந்தபோது 2 பேர் மணிவண்ணனை வழிமறித்து, கையில் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்...இதில் ரத்த வெள்ளத்தில் மணிவண்ணன் சுருண்டு விழுந்தார்..

 மருத்துவமனை

மருத்துவமனை

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது பின்னந் தலை, வலது தோள்பட்டை, மார்பு என பல இடங்களில் காயங்கள் கிடந்தன.. ரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறி இருந்தது.. மணிவண்ணனுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. ஆனால் அவரது நிலைமை சீரியஸாக இருப்பதாக கூறப்படுகிறது.. இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்..

ஆத்திரம்

ஆத்திரம்

அதில் புளியந்தோப்பு சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (எ) உள்ள குள்ளா என்பவரின் பெயர் அடிபட்டது.. இவருக்கு 23 வயதாகிறது.. இவரது மாமியார் ஈஸ்வரியுடன் மணிவண்ணன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது பிரகாஷூக்கு தெரிந்து பலமுறை இந்த ஜோடியை கண்டித்துள்ளார்.. ஆனால் இருவருமே கேட்கவில்லை போல தெரிகிறது..

கைது

கைது

மணிவண்ணன் பிரகாஷின் மாமியாருடன் பழகி வந்ததால், ஆத்திரமடைந்த பிரகாஷ் தன்னுடைய நண்பர் சரத் சந்திரன் என்பவருடன் சேர்ந்து மணிவண்ணனை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் பிரகாஷ் மற்றும் சரத் சந்திரன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.. சரத்துக்கு 20 வயதுதான் ஆகிறதாம்.. இருவரிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+