பாரத் நெட் விவகாரத்தில் டம்மியாக்கப்பட்ட எம்.எஸ்.சண்முகம்.. முதல்வரின் தனிச்செயலாளரானார்
சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்று முக ஸ்டாலினிக்கு 4 ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரின் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாரத் நெட் விவகாரத்தில் டம்மியாக்கப்பட்ட எம்.எஸ்.சண்முகம் ஐஏஏஸ் முதல்வரின் மூன்றாவது செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்று முக ஸ்டாலின் பொறுப்பேற்ற நேற்று, 4 ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரின் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தொல்லியல்துறை ஆணையராக இருக்கும் உதயச்சந்திரன் முதல்வரின் முதலாவது முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அருங்காட்சியங்கள் ஆணையம்
இதேபோல் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருக்கும் உமாநாத், முதல்வரின் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் மூன்றாவது செயலாளராக எம்.எஸ். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அருங்காட்சியங்கள் துறையின் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.

தொழில்துறை ஆணையர்
புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் முதல்வரின் நான்காவது செயலாளர் என்ற பதவியில் அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தொழில்துறை ஆணையராகப் பணியாற்றி வருகிறார்கள்.

கையெழுத்து போட மறுப்பு
முதல்வரின் மூன்றாவது செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள எம்.எஸ். சண்முகம் தமிழ்நாடு ஃபைபர் நெட் நிர்வாக இயக்குநராக பதவி வகித்தவர் ஆவார். அந்த துறையில் உறுதியான முடிவுகளை எடுத்தவர். 2002 ஐஆர்எஸ் பேட்ஜ் அதிகாரியான எம்எஸ் சண்முகம் ஐஏஎஸ், அதிமுக ஆட்சியின் போது பாரத் நெட் விவகாரத்தில் டெண்டரில் கையெழுத்து போட எதிர்ப்பு தெரிவித்தார் என்று அப்போது சொல்லப்பட்டது.

3வது செயலாளராக நியமனம்
இதனால் அவர் அந்த பதவியில் இருநது தூக்கி அடிக்கப்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. திமுக தலைவர்கள் ஐபெரியசாமி உள்பட முக்கிய தலைவர்கள் எம்எஸ் சண்முகம் டம்மியாக அருங்காட்சியங்கள் துறையின் ஆணையராக மாற்றப்பட்டது குறித்து அப்போதே கேள்வி எழுப்பி இருந்தார்கள் இந்நிலையில் எம்எஸ் சண்முகம் ஐஏஎஸ் தற்போது முதல்வரின் தனிச் செயலாளர்களில் ஒருவரகாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications