குளியலறையில் பெண்ணின் உடம்பு பூரா வெள்ளி நகை! கிட்ட பார்த்தால்? சினிமாவிலும் நடக்காத மும்பை சம்பவம்
சென்னை: வீடு ஏதாவது வாடகைக்கு இருக்கிறதா? என்று கேட்க வந்த நபரால் திடீரென பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. இது தொடர்பாக போலீசில் புகார் தரப்பட்டு, விசாரணையும் மேற்கொண்டபோதுதான் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின.. சம்பந்தப்பட்டவரிடம் போலீசாரின் விசாரணையும் நடந்து வருகிறது.. பலரையும் வியக்க வைத்துள்ள இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் நவ்சாரியைச் சேர்ந்தவர் ஜோதி பனுசாலி.. 27 வயதாகிறது.. இவரது சகோதரி நிஷா மும்பையில் உள்ள வசாய் பகுதியில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று நிஷா வீட்டில் இல்லை.. அவரது மாமியார் மட்டும் தனியாக இருந்திருக்கிறார்.. அப்போது யாரோ வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியிருக்கிறார்கள்.. இதனால் நிஷாவின் மாமியார் வெளியே சென்று கதவை திறந்து பார்த்துள்ளார்..
வாடகைக்கு வீடு
அப்போது வாசலில் நின்றிருந்த நபர், இங்கே வீடு ஏதேனும் வாடகைக்கு இருக்கிறதா? என்று கேட்டுள்ளார்.. அப்படி எதுவும் இல்லையே என்று மாமியார் சொல்லவும், மெல்ல பேச்சு தந்த அந்த நபர், சிறிது நேரத்தில், பாத்ரூம் போகணும்.. உங்க வீட்டு பாத்ரூமை யூஸ் பண்ணிக்கலாமா? அனுமதி கேட்டுள்ளார்.. உடனே மாமியாரும் சரியென்று சொல்லி பாத்ரூம் இருக்கும் இடத்தை காட்டியிருக்கிறார்..
குளியலறையில் அலறிய மாமியார்
பாத்ரூமுக்குள் சென்ற நபர், குழாயில் தண்ணீர் கசிவு இருக்கிறதே என்று சொல்லியிருக்கிறார்.. அப்படியா? என்று பாத்ரூமுக்குள் நுழைந்து சென்று பார்த்துள்ளார் மாமியார்.. உடனே அந்த நபர், பாத்ரூம் உள்ளேயே மாமியாரை வைத்து பூட்டிவிட்டு, வீட்டிலிருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்து விட்டார். இதை கொஞ்சமும் எதிர்பாராத மாமியார், பாத்ரூமுக்குள்ளிருந்தே கத்தி கூச்சலிட்டார்..
அவரது சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து அவரை மீட்டுள்ளனர்... அப்போதுதான் வீட்டிலிருந்த நகைகள் திருடுபோயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தந்தனர்.. விரைந்து வந்த போலீசாரும், வழக்குப்பதிவு செய்து இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்..
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
அதில், தாடி வைத்த நபர் ஒருவர், நிஷாவின் மாமியார் வீட்டுக்கு சென்றது பதிவாகியிருந்தது.. இதனால், வேறு பகுதியிலிருந்த மற்றொரு சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர்.. அதே நபர், ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வது பதிவாகியிருந்தது.. அப்போது திடீரென தன்னுடைய முகத்திலிருந்த தாடியை பிய்த்து எடுத்தார்.. பிறகு, தன்னுடைய பேன்ட், சட்டைகளையும் அவிழ்த்தார்.. பிறகுதான் தெரிந்தது, அந்த நபர், உண்மையிலேயே பெண் ஆவார்.
ரயிலில் ஏறிய அந்த பெண், குஜராத் மாநிலம் நவ்சாரி என்ற இடத்தில் இறங்கி சென்றதையும் போலீசார் கண்டறிந்து, அதிர்ச்சியடைந்தனர்.. பிறகு சம்பந்தப்பட்ட பெண் நிஷா குடும்பத்துக்கு ஏற்கனவே அறிமுகமானவரா? என்பதை அறிந்து கொள்ள, மேற்கண்ட 2 சிசிடிவி வீடியோக்களையும், நிஷாவிடம் கொண்டுவந்து அடையாளம் காட்டினர் போலீசார்.
அடுத்த அதிர்ச்சி தகவல்
வீடியோவை பார்த்த நிஷா, அந்த பெண் தன்னுடைய சகோதரி ஜோதி பனுசாலி என்றார்.. இதைக்கேட்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்து விசாரித்தனர்.. அப்போதுதான் பகீர் தகவல்களை அந்த பெண் போலீசாரிடம் கூறினார்..
அதாவது, ஷேர் மார்க்கெட்டில் 30 லட்சம் ரூபாயை இழந்துவிட்டாராம்.. இதனால் தன்னுடைய நகைகளும் அடகு வைத்துவிட்டாராம் ஜோதி.. அந்த அடகு நகைகளை மீட்பதற்காகவே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் தந்தார்..
1.5 கோடி தங்கம், வெள்ளி நகைகள்
இதையடுத்து, நிஷா வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை அப்பெண்ணிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.. அத்துடன் கொள்ளையடித்த பெண் ஜோதியையும் கைது செய்தனர்.. அதாவது கொள்ளை நடந்து 12 மணி நேரத்திலேயே, குற்றவாளி ஜோதியை போலீசார் கைது செய்துவிட்டனர்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications