மூணாறு தொழிலாளர்களின் மரண செய்தி மன வேதனை தருகிறது - ஓபிஎஸ், ஸ்டாலின்,சீமான் இரங்கல்
மூணாறு அருகே தேயிலை தோட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை: மூணாறு ராஜமாலா தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
மூணாறு ராஜமாலா தேயிலைத் தோட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கி பாதுகாக்க வேண்டும் என்று கேரளா முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று அனைவரும் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

மன வேதனை
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது இரங்கல் செய்தியில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

உடனடி உதவி தேவை
உயிரிழந்தவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மூணாறு ராஜமாலா தேயிலைத் தோட்ட நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்! நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ வசதிகளைச் செய்து, இழப்பீடு வழங்கி அவர்களை கேரளா முதல்வர் பாதுகாக்க வேண்டும் தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

சீமான் அதிர்ச்சி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது இரங்கல் செய்தியில் கேரள மாநிலம் மூணாறில் தேயிலைத் தோட்டப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததாகவும், 60க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் வெளியாகும் செய்திகள் பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் அளிக்கிறது.

துயர் துடைப்பு உதவிகள்
கேரள அரசு, இப்பெருந்துயரில் இருந்து மீண்டு வரவும், மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு உதவிகள் வழங்கிடவும் துணைநிற்க வேண்டியது தமிழர்களின் தார்மீகக் கடமை என்பதனை உணர்ந்து தமிழக அரசு தேவையான உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications