டீ விற்றார்னு சொன்னா நம்பும் மக்கள்! மோடி நாட்டை விற்கிறார்னு சொன்னால் நம்புவதில்லை! சீறிய சீமான்!
சென்னை : நாட்டையே அதானி அம்பானிக்கு விற்பனை செய்து விடுகின்றனர், டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், மோடி நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை என பிரதமர் நரேந்திர மோடியை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217- வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னையிலுள்ள அவரது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அதிமுக, திமுக,பாஜக என யாருக்கும் தனித்து போட்டியிட திராணி இல்லை, எங்களுக்கு உள்ளது; என பேசினார்.
மேலும், நாட்டையே அதானி அம்பானிக்கு விற்பனை செய்து விடுகின்றனர், டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், மோடி நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை.
5 மாநில தேர்தல் வரவில்லை என்றால் விலையை குறைத்து இருக்க மாட்டார்கள். இப்படி மக்களை ஏமாற்றுவதே பாஜகவின் வேலையாக உள்ளது." என கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications