இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு.. 40-ஐபோல் 4-லும் வித்தியாசம் காட்டிய சீமான்
Recommended Video
சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
கடந்த 18-ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளிலும் வழக்கு நிலுவையில் இருந்ததால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இதனிடையே சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் கடந்த மாதம் மரணமடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட 3 தொகுதிகள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து இந்த 4 தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
என் தங்கை கோமதி.. இன்னும் பல வெற்றிகளை வாரிக் குவிக்கணும்.. சீமான் வாழ்த்து
இந்த நிலையில் திமுக, அதிமுக, அமமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்தாகிவிட்டது. இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.
போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:
1. சூலூர்- வழக்கறிஞர் வெ.விஜயராகவன்
2. அரவக்குறிச்சி- பா.க. செல்வம்
3. ஒட்டப்பிடாரம்- மு.அகல்யா
4. திருப்பரங்குன்றம் - ரா.ரேவதி
வழக்கம் போல் வேட்பாளர் தேர்வில் புதுமையை புகுத்தியுள்ளார் சீமான். கடந்த 18-ஆம் தேதி நடந்த 40 லோக்சபா தொகுதி தேர்தலில் 20 ஆண் வேட்பாளர்கள், 20 பெண் வேட்பாளர்கள் என சம இடம் கொடுத்தார். அது போல் 4 சட்டசபை தொகுதியிலும் இரு ஆண், இரு பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
வருகின்ற மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அறிவிப்பு pic.twitter.com/H9CnEcjpCA
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) April 24, 2019