"தேவையில்லை" 10% இடஒதுக்கீடு.. உயர்சாதி ஏழைகளுக்கு எதற்கு? கொதிக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமான்!
சென்னை: உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு பின் தேர்தல் அரசியல் அனைவரையும் நாம் தமிழர் கட்சி திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிடுவது, வாக்கு வங்கி சதவிகிதத்தில் தொடர்ந்து வளர்ச்சி என்று சீமான் பலரையும் ஈர்த்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு விவகாரங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் சீமான், பாஜகவை இன்னும் தீவிரமாக எதிர்த்து வருகிறார். அதேபோல் சில நேரங்களில் ஆ.ராசா விவகாரம், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

எதிர்க்கட்சிகள்
இதனிடையே உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு, ஆளுநர் vs திமுக மோதல், கனமழை பாதிப்பு என்று எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சியின் சீமான் கடந்த சில வாரங்களாக அமைதி காத்து வருகிறார். அறிக்கைகளிலும், ட்விட்டர் வாயிலாகவும் அரசியல் பேசி வந்த சீமான், தற்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

10% இடஒதுக்கீடு
இந்த நிலையில் உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், இடஒதுக்கீடு என்பது ஏழை, பணக்காரன் என்று பொருளாதார ரீதியான ஏற்றத் தாழ்வுகளுக்காக கொண்டு வரப்பட்டது அல்ல.

நாதக நிலைப்பாடு
சாதியால் சமூகத்தில் இருந்து அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை மறுக்கப்பட்டது. அதனால் அதே சாதியின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பில் நீதி வழங்குவதே இடஒதுக்கீட்டின் அடிப்படை. ஆனால் உயர்சாதிகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குகிறார்கள். அவர்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்பதே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.

அண்ணன் - தம்பி சண்டை
தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சிப்பது ஏன் என்ற கேள்விக்கு, திமுகவினருடன் தனிப்பட்ட முறையில் எந்த பகையும் கிடையாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணன் போலவே நினைக்கிறேன். அவரை விமர்சிப்பது கூட அண்ணன், தம்பி சண்டை போலதான். அதேபோல் திமுகவின் முக்கிய தலைவர்கள் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications