"தேவையில்லை" 10% இடஒதுக்கீடு.. உயர்சாதி ஏழைகளுக்கு எதற்கு? கொதிக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமான்!
சென்னை: உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு பின் தேர்தல் அரசியல் அனைவரையும் நாம் தமிழர் கட்சி திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிடுவது, வாக்கு வங்கி சதவிகிதத்தில் தொடர்ந்து வளர்ச்சி என்று சீமான் பலரையும் ஈர்த்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு விவகாரங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் சீமான், பாஜகவை இன்னும் தீவிரமாக எதிர்த்து வருகிறார். அதேபோல் சில நேரங்களில் ஆ.ராசா விவகாரம், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

எதிர்க்கட்சிகள்
இதனிடையே உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு, ஆளுநர் vs திமுக மோதல், கனமழை பாதிப்பு என்று எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சியின் சீமான் கடந்த சில வாரங்களாக அமைதி காத்து வருகிறார். அறிக்கைகளிலும், ட்விட்டர் வாயிலாகவும் அரசியல் பேசி வந்த சீமான், தற்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

10% இடஒதுக்கீடு
இந்த நிலையில் உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், இடஒதுக்கீடு என்பது ஏழை, பணக்காரன் என்று பொருளாதார ரீதியான ஏற்றத் தாழ்வுகளுக்காக கொண்டு வரப்பட்டது அல்ல.

நாதக நிலைப்பாடு
சாதியால் சமூகத்தில் இருந்து அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை மறுக்கப்பட்டது. அதனால் அதே சாதியின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பில் நீதி வழங்குவதே இடஒதுக்கீட்டின் அடிப்படை. ஆனால் உயர்சாதிகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குகிறார்கள். அவர்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்பதே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.

அண்ணன் - தம்பி சண்டை
தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சிப்பது ஏன் என்ற கேள்விக்கு, திமுகவினருடன் தனிப்பட்ட முறையில் எந்த பகையும் கிடையாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணன் போலவே நினைக்கிறேன். அவரை விமர்சிப்பது கூட அண்ணன், தம்பி சண்டை போலதான். அதேபோல் திமுகவின் முக்கிய தலைவர்கள் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications